Cuddalore

News April 6, 2024

தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு தேசியக் கொடியை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஏராளமான கலந்துகொண்டு கயிறு தேசிய கொடியை ஏந்தி நாடாளுமன்றத் தேர்தலில் 100%வாக்களிப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 6, 2024

கடலூர்: பதற்றமான வாக்குச்சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,11 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.மேலும் சிதம்பரம் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,7 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

கடலூர் வந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு நேற்று இரவு 9.45 மணிக்கு கடலூர், ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் முதல்வர் தங்கினார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News April 6, 2024

கடலூர் மீன் அங்காடியில் நா.த.க-வினர் வாக்கு சேகரிப்பு

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்திற்கு ஆதரவாக கடலூர், மஞ்சக்குப்பம் மீன் அங்காடி மற்றும் கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

News April 5, 2024

கடலூர் தொகுதி வேட்பாளர் வாகனம் சோதனை

image

கடலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் வந்த போது தேர்தல் பறக்கும் படை குழுவினர் விஷ்ணு பிரசாத் காரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

மீனவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல்15ஆம் முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீனவர்கள் 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம். இதை மீறி மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட மீனவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர், 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் பங்கேற்று மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

News April 5, 2024

கடலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

கடலூரில் இளநீர் விற்பனை அமோகம்

image

கடந்த சில நாட்களாக கடலூரில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது. வெப்ப தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள குளிர்ச்சி தரும் பொருட்களை மக்கள் நாடி வருகின்றனர். அதன்படி, உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சி தரும் இளநீர் கடலூர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பல பகுதியில் விற்கப்பட்டு வருகிறது. ரூ.30 முதல் 40 வரை விற்கப்படும் இளநீரை, கடலூர் பொதுமக்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் வாங்கி பருகி வருகின்றனர்.

News April 5, 2024

கடலூர்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (ஏப்ரல்.5) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மருத்துவர் கவிதா தலைமை தாங்கினார். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!