Cuddalore

News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூரில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 3, 2025

கடலூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் வரை மட்டுமே இயக்கப்படும், தாம்பரம் செல்லாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரப் போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2025

விருத்தாசலம்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

விருத்தாசலம் பகுதியில் இன்று (மார்ச் 2) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை விருத்தாசலம் AWPS காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி (9445490570) மற்றும் நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை கம்மாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் (9498154210) ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

கஞ்சா விற்றால் ‘குண்டாஸ்’ கடலுார் எஸ்.பி.,எச்சரிக்கை

image

கடந்த 2 மாதங்களில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 61 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாக மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி. கூறுகையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்.

News March 2, 2025

சென்னை செல்லும் கடலூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் மட்டுமே இயக்கப்படும், தாம்பரம் செல்லாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரப் போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 1, 2025

குறிஞ்சிப்பாடி: 39 பேருக்கு இலவச பட்டா வழங்குதல்

image

குறிஞ்சிப்பாடி வட்டம் ரங்கநாதபுரம், விருப்பாச்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 39 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் வருவாய்த்துறை அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 1, 2025

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW

News February 28, 2025

திருமண தடை நீக்கும் சிதம்பரம் அங்காளம்மன்

image

சிதம்பரத்தில் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று சிதம்பரம் நகரப் பகுதியில் உள்ள தில்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் திருமண தடை நீங்க சம்பங்கி மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இக்கோயில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

News February 28, 2025

10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 28, 2025

கடலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 28-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!