Cuddalore

News April 10, 2024

கடலூர் 22-வது வார்டில் தூய்மைப்பணி

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு, சொரக்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை ஓரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபாஷிணி ராஜா முயற்சியில் 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் இன்று அகற்றப்பட்டது.

News April 10, 2024

கடலூரில் சின்னம் பொருத்தம் பணி

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேட்பாளர்களின் பெயர், சின்னம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2024

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு

image

கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 227 வாக்குச்சாவடி மையங்களுக்கு 584 வாக்குச்சாவடி இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் கடலூர் தாலுகா அலுவலகத்தில் 8 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

News April 10, 2024

கடலூரில் கூடைப்பந்து அணி தேர்வு தேதி அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வரும் 13 ஆம் தேதி அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து அரங்கில் 18 வயதிற்குட்பட்ட இருபாலின வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கடலூர் மாவட்ட அணி சார்பாக கலந்து கொள்வார்கள் என கூடைப்பந்து சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2024

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. நேற்று முன்தினம் மாலை புதிய பைக் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது பெரியகாட்டுசாகை மின்துறை அலுவலகம் அருகே நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 10, 2024

கடலூர்: தொல்.திருமாவளவன் வீட்டில் சோதனை

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தங்கியிருந்த வீட்டில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நேற்று மாலை சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரமாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் ஒரு உத்தரவிட்டுள்ளனர்.

News April 10, 2024

புவனகிரி: இன்று திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

image

புவனகிரி மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் விசிக வேட்பாளர் திருமாவளவன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். சிதம்பரம் தொகுதியில் பாஜக, அதிமுக, மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று பிரதான கட்சிகளை எதிர்த்து களம் காணும் திருமாவளவன் பானை சின்னத்திற்கு வாக்கினை கேட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 9, 2024

சிதம்பரம் திருமாவளவன் வீட்டில் ஐடி ரெய்டு

image

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளனர்.பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிதம்பரம் புற வழி சாலையில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் இன்று இரவு ஐடி ரெய்டு 45 நிமிடங்கள் நடந்ததில் எதுவும் கிடைக்கவில்லை என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News April 9, 2024

கடலூர்: திருமாவளவன் பாஜகவை சாடி பிரச்சாரம்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் உரிமை பறிபோகும். மகளிர் உரிமைத்தொகைக்கு ஆபத்து ஏற்படும்.100 நாள் வேலை திட்டத்தில் சிக்கல் வரும் என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைத்தார். மத்திய அரசை எதிரியாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

News April 9, 2024

கடலூரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கி உடனே வழங்க வேண்டும், எங்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.

error: Content is protected !!