Cuddalore

News April 30, 2024

கடலூர்: தம்பதியினர் பலி

image

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து புதுக்கூரைப்பேட்டை அருகே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வகுமார்-சபிதா தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பெற்றோர் விபத்தில் பலியான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 30, 2024

கடலூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

image

கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலில் இருந்து வெப்பத்தை சமாளிக்க கடலூர் பகுதி பொதுமக்கள் குளிர்ச்சியான பழங்கள் மற்றும் பழங்களின் ஜூஸ்களை அணுகி வருகின்றனர். மேலும் தற்போது தர்பூசணி சீசன் என்பதால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தர்பூசணி வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கடைகளில் தர்பூசணி 1 கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை கடலூரில் விற்கப்படுகிறது.

News April 30, 2024

கடலூர்: அகற்றும் பணி தடுத்து நிறுத்தும்

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது. அப்பொழுது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று திமுக மாநகர செயலாளர் ராஜா நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வியாபாரிகளுக்கு கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

News April 30, 2024

கடலூர்:கார் மீது பைக் மோதியதில் தகராறு; 2 பேர் மீது வழக்கு!

image

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் கந்தன்.இவர் முதுநகரில் இருந்து கடலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சிவானந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி இருந்த பரணி முருகனின் காரின் பின்பகுதியில் கந்தன் ஓட்டி வந்த பைக் மோதியது.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் கந்தன், பரணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News April 30, 2024

கடலூர் அருகே திடீர் விலை உயர்வு

image

விருதாச்சலம் பகுதியில் விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று முதல் இளநீர் விலை திடீர் உயர்வு, வெயிலின் தாக்கத்தால், கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை தணிக்க, இளநீரை விரும்பி அருந்துகின்றனர். ரூ. 25 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில், தற்போது 30 முதல் 50 வரை விற்கப்படுகிறது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி அருந்துகின்றனர்.

News April 30, 2024

கடலூர்:மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் செய்த செயல்

image

புதுச்சேரி மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்த முனுசாமி தீபா இவர்களின் மகன் கணேஷ் (10) வயதுள்ள சிறுவன் வீட்டில் கோபித்துக் கொண்டு சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே பேருந்தில் நின்று கொண்டிருந்தார்.மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சின்னையன் அடைத்து பேசி யார் என விசாரித்து புதுச்சேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

News April 29, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜராஜன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

கடலூர் மருத்துவமனையில் பொருத்தும் பணி

image

கடலூர், மஞ்சக்குப்பம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, சித்தா உள்ளிட்ட பிரிவுகளுக்கு இடையே சிறிய அளவிலான டிரைனேஜ் பைப்புகள் இருந்தன. இதனால் அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பெரிய அளவிலான ராட்சசன் பைப்புகள் பொருத்தும் பணி ஊழியர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News April 29, 2024

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உத்தரவு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கை நாளை சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 29, 2024

சிறப்புமிகு பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்!

image

பிச்சாவரம் சிதம்பரத்துக்கு அருகே வங்க கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள சதுநில காடுகள் அல்லது மங்குரோவ் காடுகள் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகளாகும். இந்த பிச்சாவரம் காடு 2800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.சிறுசிறு தீவாக காட்சியளிக்கும் இக்காடுகளில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான சிற்றினங்கள் வாழ்கின்றன. இக்காடுகளில் சுரபுன்னை மரங்கள் நிறைந்திருக்கின்றன.

error: Content is protected !!