Cuddalore

News January 10, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

பேருந்து பயண அட்டை விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மின்ஆளுமை முகமை மூலம் மாற்று திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களுக்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

News January 10, 2026

கடலூரில் அர்ச்சுனன் வணங்கிய கோயில்

image

கடலூர், பண்ருட்டி திருவதிகை வீரட்டனேஸ்வரர் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான அர்ச்சுனன் இங்குள்ள வீரட்டானேஸ்வரரை வணங்கினார் என கூறப்படுகிறது. இக்கோயில் கிபி 7-ம் நூற்றாண்டிற்கு முன் பல்லவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டும் முன் இங்கு வந்து கட்டடக் கலையை படிக்க இங்கு தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. SHARE IT.

News January 10, 2026

கடலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

கடலூர் மக்களே..முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க.

News January 10, 2026

கடலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

கடலூர் மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News January 10, 2026

கடலூர்: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

image

பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவரது மனைவி கடந்த 4-ம் தேதி இறந்து போனார். தாயார் இறந்துபோன மனவேதனையில் இருந்த வெங்கடேசனின் மகன் சந்தோஷ்குமார் (33) நேற்று தூக்குபோட்டு கொண்டார். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News January 10, 2026

கடலூர்: வெளிநாடு செல்ல ஆசையா?

image

கடலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

கடலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட கஞ்சா வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த முகமது பைசல் (37) என்பவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று கேரளா திரும்பிய அவரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.

News January 10, 2026

கடலூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 10, 2026

கடலூர்: 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

புவனகிரி அடுத்த வத்ராயன்தெத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் திவாகர்(15). இவர் நெய்வேலியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்ததால், ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர கூறியுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் வராததால் மனமுடைந்த மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

error: Content is protected !!