India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (04/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கடலூரில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான விபரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கடலூரில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான விபரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருது பெறும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை கடலூர் மாநகர திமுக செயலாளர் ராஜா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன்,புகழேந்தி,மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் மூவேந்தன்,பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி செல்வமணி (58). இவருக்கும் இவரது தம்பி சுப்பிரமணியனுக்கும்(55) இன்று இரவு திடிரென குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், செல்வமணியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (03/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் வரும் செப்.21 முதல் 6.10.2024 வரை மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்களை விற்பனைக்கு வைக்க விரும்பினால் 10.9.2024-க்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி புவனகிரியில் 47 மில்லி மீட்டர் மழையும், சேத்தியாதோப்பில் 40 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 13.1 மி.மீ, சிதம்பரத்தில் 10.6 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 9.6 மி.மீ, லால்பேட்டையில் 6 மி.மீட்டரும், விருத்தாசலத்தில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

பண்ருட்டி தாலுகா, காடாம்புலியூர் போலீசார் நேற்று கீழ்மாம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு முந்திரி தோப்புக்குள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(55), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(33), ராஜா(50), அன்பழகன்(32), விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலை பாளையம் அன்பு(32), புதுப்பாளையம் சீனு(33) ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.