India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 2013 இல் பணியாளர்களை அரசின் வெவ்வேறு துறைக்கு மாற்றி அமைத்தது. அதில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களுக்கு பதவி குறைப்பு, சம்பள குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை பல்கலைக்கழக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில்10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் அமைந்துள்ள சீரடி சாயிபாபா ஆலயத்தில் நேற்று பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு சாய் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய் பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து திரைப்பட நடிகை விந்தியா இன்று மாலை சேத்தியாத்தோப்பு நகரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். அவருடன் புவனகிரி தொகுதி எம் எல் ஏ அருண்மொழிதேவன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
கடலூர் ஆள்பேட்டை பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்தி தலைமையில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் உரிய ஆவணம் இன்றி ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பொருட்களை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பார்வையிட்டார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சந்திரகாசனை ஆதரித்து இன்று மாலை 5 மணி அளவில் சிதம்பரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் கடலூர் மேற்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செலவினங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் வங்கி இணையதளம் மூலம் சந்தேகத்திற்கிடமான பணபரிவர்த்தனைகள் மற்றும் அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கடலூரில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
எனவே கடலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராதிகா , சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அருகே பாறையூரில் வசிப்பவர் மாதேஸ்வரன். குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவர் ,இன்று அதிகாலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள வாட்டர் டேங்க் பில்லரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.