Cuddalore

News January 15, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

கடலூர்: கட்டாயம் செல்ல வேண்டிய ஆஞ்சநேயர் கோயில்கள்!

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்கள்: 1.கடலூர் வீர ஆஞ்சநேயர் கோயில், 2. சிதம்பரம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோயில், 3. கிள்ளை சஞ்சீவிராயர் கோயில், 4. ஆயிப்பேட்டை ராம பக்த அனுமான் கோயில், 5. பி.முட்லூர் ராம ஆஞ்சநேயர் கோயில். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயில்களில் தரிசனம் செய்தால் மனபலம் கூடும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News January 14, 2026

கடலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<> tnuwwb.tn.gov என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன், லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News January 14, 2026

கடலூர்: ராணுவத்தில் வேலை – APPLY NOW

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

கடலூர்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர் நேற்று குமாரப்பேட்டை அருட்பெருஞ்ஜோதி நகர் அருகில் பைக்கில் சென்ற போது, சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் ஏறி இறங்கிய போது ஆறுமுகம் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 14, 2026

கடலூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

கடலூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

கடலூர்: 2,000 போலீசார் பாதுகாப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ்.பி ஜெயக்குமார் மேற்பார்வையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி தலைமையில், 9 துணைக் கண்காணிப்பாளர்கள், 39 ஆய்வாளர்கள், 231 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி. அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

கடலூர்: தவெக நிர்வாகிக்கு கத்திவெட்டு

image

கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (41). தமிழக வெற்றிக் கழகத்தின் பகுதி செயலாளரான இவர் நேற்று இரவு கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர், அவரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வெற்றிவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!