India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மன்சூர்அலி (38). இவர் மீது விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் மன்சூர்அலியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று உத்தரவிட்டார். அதன் பேரில் மன்சூர் அலி இன்று தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகி குழந்தை காலனி முத்து தந்தை இன்று காலமானார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் இன்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கடலூர் நகர துணை செயலாளர் பூபாலன், முகாம் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
சேலத்திலிருந்து தினமும் புறப்படும் சேலம் – விருத்தாசலம் பாசஞ்சர் DEMU ரயில் (06122/06121) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை வரும் 3-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சேலத்தில் இருந்து விருத்தாசலம், ஊத்தங்கால் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் சந்திப்பை வந்தடைகிறது. முன்பு இந்த ரயில் சேலம் – விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 19ம் தேதி கோமதி என்பவர் கொலை வழக்கில், கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்திலும் வழக்கு தொடர்ந்ததால் நேற்று மேலும் 3 பேர் கைது எனவும் காவல்துறை அறிக்கை வெளியிட்டது. 2021ல் ஏற்பட்ட தகராறு தொடர்பாகவே தற்போது கோமதி மரணம் நடந்துள்ளது என அவரின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர். இதுதவிர வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் இன்று நள்ளிரவு முயற்சித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருக்கும் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் இன்று நள்ளிரவு முயற்சித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருக்கும் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க ஒன்றிப்பு ஊழியர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொழிலாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிர்வாகம் சார்பில் பணிபுரிந்து வந்த 5 ஊழியர்களை பணி மாற்றம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 தொழிலாளர்கள் திடீரென்று தொழிற்சாலை முன்பு 5 பணியாளர்கள் தனது சங்கத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த முதுநகர் போலீசார் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.