India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்றும், இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (29/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2.10.2024 அன்று FL-1 மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் FL-2/FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள், மதுபான கூடங்களை மூட வேண்டும். இதைமீறி மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் கலெக்டர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (28/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் முருகன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் பொன்மகரம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கணபதி மனைவி ஜெயபிருந்தா(65). இவரது மகன் பெருமாள்(49) திருமணமாகி தனியாக அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் பூர்வீக சொத்தை பிரித்து தரும்படி கேட்டு ஜெயபிருந்தாவிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரின் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளை இன்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.10.2024 அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (27.09.2024) பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜென்னடி ஜெபக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் தரைபாலத்தின் ஓரத்தில் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருந்தன. மழைக்காலம் நெருங்குவதை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 3 டன் அளவிற்கு அங்கு இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தினர். இதனால் கடலுக்கு செல்ல வேண்டிய பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறபடுத்தப்பட்டன.
Sorry, no posts matched your criteria.