Cuddalore

News May 2, 2024

கடலூரில் 55 பேர் கைது 

image

கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் அறிவுறுத்தியதின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்றுக் கொண்டிருந்த 55 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1034 மதுபாட்டில்கள், 6 லிட்டர் சாராயம், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News May 2, 2024

கடலூர்:54 நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

image

நேற்று தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனை மீறி கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காத மற்றும் பணியாளர்கள் பணிபுரிய முன்அனுமதி பெறாத 54 நிறுவனங்களுக்கு 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு உத்தரவிட்டுள்ளார்.

News May 1, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் லெனின், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

கடலூர் ஆட்சியர் வாழ்த்து தெரிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் இன்று வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News May 1, 2024

வடலூர்: கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம்

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

கடலூர் அருகே விபத்து;மரணம் 

image

நேற்று புவனகிரி பெருமாத்தூர் பகுதியில் மின்சார பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் மின் கம்பம் அலட்சியமாக எடுத்துச் செல்லப்பட்டது.அப்பொழுது இருசக்கர வாகனத்தில் விருதாச்சலம் சாலையில் சென்று கொண்டிருந்த மயிலாடுதுறை சேர்ந்த பாபு (42) என்பவர் எதிர்பாராத விதமாக ஜேசிபி வாகனத்தில் மோதி,தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 1, 2024

கடலூர் மாவட்டத்தில் நேற்றைய வெப்பநிலை….

image

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் -30) விருத்தாசலம் 41 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 40 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோவில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 40 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News May 1, 2024

கடலூர் மத்திய சிறையில் ‘கஞ்சா’ பறிமுதல்

image

கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது . இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News May 1, 2024

கடலூர் மத்திய சிறையில் ‘கஞ்சா’ பறிமுதல்

image

கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News May 1, 2024

கடலூர் போலீசார் முக்கிய அறிவிப்பு

image

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!