Cuddalore

News May 16, 2024

கடலூர்:நீர் மோர் பந்தலை போலீசார் அகற்றினர்

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சி கே எஸ் கார்த்திகேயன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்த நிலையில் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி போலீசார் அந்த பந்தலை அகற்றினர். இத்தகவல் அறிந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் அந்த இடத்தில் ஒன்று திரண்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

News May 16, 2024

கடலூர் மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

நெஞ்சுவலியால் நடத்துனர் மரணம்

image

புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து கடலூர் வந்தபோது நடத்துனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் கோபால் பேருந்தை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குள் பயணிகளுடன் ஓட்டிச் சென்றார். அங்கு நடத்துனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News May 16, 2024

கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

image

கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெயிலால் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது.

News May 15, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (15/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் நந்தகுமார், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பலராமன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கிய போது கைது

image

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுருநாதன் என்பவர் தனது ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் சந்தோஷ் குமார் என்பவரிடம் லஞ்சமாக 15,000 பெற்றுள்ளார்.அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொண்டனர்

News May 15, 2024

கடலூரில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்

image

கடலூர் அருகே பண்ருட்டி எம்.புதுப்பாளையம் பகுதியில் இன்று காலை ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளார். இருப்பினும் அவர் உயிர் தப்பித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலின் பேரில் புதுநகர் காவல் நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் ஜெயபிரகாஷ் (28). சொந்த ஊர் ஆரோவில் இவர் தனது மாமியார் வீடு பண்ருட்டியில் தங்கியுள்ளதாக கூறினார்.

News May 15, 2024

கடலூர் உழவர் சந்தையில் அதிகாரி ஆய்வு

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், உணவு பாதுகாப்பு பற்றியும், பழங்கள் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவம் மற்றும் கார்பைடு கல் போன்றவற்றை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது வேளாண்மை அலுவலர் மகாதேவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

News May 15, 2024

கடலூர்: அரசு பள்ளிகளில் 86.69 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

image

கடலூர் மாவட்டத்தில் 117 அரசு பள்ளிகளில் இருந்து 6,153 மாணவர்களும் 7,407 மாணவிகளும் என மொத்தம் 13,560 மாணவ – மாணவிகள் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 5,022 மாணவர் களும், 6,733 மாணவிகளும் என மொத்தம் 11,755 மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.62, மாணவிகளின் தேர்ச்சி சத வீதம் 90.90. இதன் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 86.69 ஆகும்.

News May 15, 2024

கடலூர் அருகே பரிதாபம்

image

பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில் கரும்பு தோட்டத்தைக் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விடுவதாகவும், அதனைத் தடுக்க மின்கம்பிகள் அமைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!