India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர், மஞ்சக்குப்பம், கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனையில் காய்ச்சல் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட ‘நிலவேம்பு கசாயம்’ பொதுமக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. மேலும் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை கடலூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (17/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராஜராஜன், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் துறை ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்திய அகழாய்வில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர்கள் செப்பு நாணயங்கள் விஜயநகரப் பேரரசு காலத்தை சார்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தென்பண்ணையாற்றில் ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்
பண்ருட்டி அடுத்த சொரத்தங்குழியை சேர்ந்தவர் குணசேகரன் (34). இவரது மனைவி கமலா(28). குணசேகரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை கமலா கண்டித்ததால் ஆத்திரமடைந்த குணசேகரன் நேற்று இரும்பு கம்பியால் அவரது தலையில் அடித்தார். இதில் காயமடைந்த கமலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்.இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.ஊருக்கு வந்த நிலையில் தனது இரண்டாவது மனைவி சூர்யாவுக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் அடைந்த ரமேஷ் இன்று காலை சூர்யாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்த கடலூர் துறைமுகம் காவல்துறையினர் சூரியாவின் உடலை கைப்பற்றி தப்பியோடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் 5 செ.மீட்டரும், வேப்பூர், லால்பேட்டை, பெலாந்துறை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், சிதம்பரம், காட்டுமயிலூர், சேத்தியாதோப்பு, தொழுதூர், கீழச்செருவாய் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உட்பட 9 பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் வகுப்பு வரும் 26ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோயில், மங்களூர், சிதம்பரம், கடலூர் மற்றும் நெய்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஜூன் மாதம் 7-ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இன்று கடலூர் அரசு ஐ.டி.ஐ. முதல்வர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.