India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தொழிலாளி சரவணன் (40). இவருடைய மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இதுவரை குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த சரவணன் இன்று காலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தன்னுடைய வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. கடந்த 30ஆம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் 7.65 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மறுநாள் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று 8 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இவ்விரு நாட்களிலும் சேர்த்து 15.65 கோடி ரூபாய் அளவில் விற்பனை நடந்துள்ளது.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மாயகிருஷ்ணன் (55). இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்திற்கு சென்றபோது பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் மாயகிருஷ்ணன் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவர் இன்று அதே பகுதியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முற்பட்ட போது, அவ்வழியே அதி வேகமாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/11/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிகமாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரத்தில் தலா 1 பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது. அந்தந்த பகுதி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை துரிதமாக அணைத்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.ஏன்.ராதா நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை சந்தித்து மனு அளித்தார். அதில் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடி கம்பம் அமைக்கும் பணியை பொது தீட்சிதர்கள் தடுக்கின்றனர். அதனால் பொது தீட்சிதர்கள் கொடி கம்பம் அமைக்க ஒத்துழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (31/10/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அமுதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் ஜெரினா, சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.

தீபாவளி திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களைத் தடுக்க கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.