Cuddalore

News June 10, 2024

கடலூர் அருகே மருத்துவ முகாம்

image

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமத்தில் அல் அமான் கல்வி அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன (பிம்ஸ்) மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நேற்று (ஜூன்-9) நடத்தியது. முகாமுக்கு பள்ளி தாளாளர் என்.அமானுல்லா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் தங்கதுரை முகாமை தொடங்கிவைத்தார். சமூகநல செயற்பாட்டாளர் ராயநல்லூர் ரவி பிரகாஷ், பள்ளி நிர்வாகி உவைஸ் , ஆகியோர் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அலுவலக அறை மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அறையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதில், கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுநகர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News June 9, 2024

கடலூர்: ரேஷன் கடைகள் 2 நாட்கள் இயங்காது

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிய விற்பனை முனைய இயந்திரத்தில் தரவு தளபணிகள் மேற்கொள்ள இருக்கிறது.மேலும் முழுநேர ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கி,அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதனால் 11.6.2024 மற்றும் 12.6.2024 ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்

News June 9, 2024

கடலூரில் கிரிக்கெட் போட்டி தொடக்கம் 

image

கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட கிரிக்கெட் அகாடெமி கோப்பைக்கான மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15.6.2024 அன்று தொடங்கி 22.6.2024 வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கு என 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இவை அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

News June 8, 2024

புவனகிரியில் மின் வாரியத்தை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

புவனகிரி மின்துறை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 12ம் தேதி மின் கம்பங்களில் தீ பந்தம் கட்டும் போராட்டம் நடைபெற உள்ளது. இரவில் லேசான மழை பெய்தாலே மின்சாரத்தை துண்டித்து நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின் இணைப்பை கொடுத்து விட்டு பல்வேறு பகுதிகளில் மின்சாரத்தை பல மணி நேரமாக கொடுக்காமல் இருக்கும் மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ள நோட்டீஸ் வெளியாகி உள்ளது

News June 8, 2024

கடலூர் மாணவிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது 12ம் வகுப்பு முடித்த மாணவிகள் ஆதார் எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 8, 2024

கடலூரில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

கடலூரில் மத்திய சிறை கைதி சாவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை சேர்ந்த ஆறுமுகம்(42) என்பவர் கடந்த 28.4.2022 அன்று நடந்த கொலை வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 4-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் இன்று இறந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 8, 2024

கடலூரில் என்சிசி மாணவர்கள் பாய்மர படகு பயணம்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதல் காரைக்கால் வரை என்சிசி மாணவர்களின் பாய்மர படகு பயணம் மேற்கொண்டனர்.இதில் சுமார் 70 என்சிசி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்தக் குழுவினர் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை சுமார் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் மேற்கொள்கின்றனர். கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் இந்த பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News June 8, 2024

கடலூர் சார் பதிவாளர் வீட்டில் சோதனை

image

கடலூர் பீச்ரோட்டில் வசிக்கும் திலிப் பிரசாத் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம் சிக்கியது. இதனால் நேற்று கடலூரில் உள்ள அவரது வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

error: Content is protected !!