Cuddalore

News May 20, 2024

கடலூரில் இளநீர் விற்பனை படுஜோர்

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று சீதோஷ்ண நிலை குறைந்தும் மற்றும் அதிகமாகவும் கலந்து காணப்பட்டது. இதனால் கடலூர் பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் ஒரு இளநீர் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

News May 20, 2024

கடலூர்: ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் உத்திரமாள் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

விருத்தாசலம்: தாய்மாமன் மீது பாய்ந்தது போக்சோ!

image

விருத்தாசலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் (15).சிறுமி.இவரது தாய்மாமனான (21) வாலிபர் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்ததில் மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம் போலீசார் மாணவியின் தாய்மாமன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிகின்றனர்.

News May 20, 2024

கடலூர்: மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

image

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 8-ந் தேதி முதல் இன்று வரை நடந்தது. இதில் விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று வரை இளங்கலை படிக்க 1500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற மே 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கல்லூரியில் நடக்கிறது.

News May 20, 2024

கடலூரில் எஸ்.பி. அறிவுரை

image

கடலூரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அளித்த ஒரு பேட்டியில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் சீருடை அணிந்து பணி மேற்கொள்ளும்போது பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறமையாக பணியாற்றினால் தான்பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறமுடியும்.அதனால் திறமையுடன் பணியாற்றுங்கள் என்றார்.

News May 20, 2024

கடலூர் :வெள்ளபாக்கம் பகுதி மக்கள் சாலை மறியல்

image

கடலூர் வெள்ளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா தேவநாதன் அதே பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் வாழை மற்றும் கரும்பு நடவு செய்து வந்துள்ளனர்.இந்த நிலம் தொடர்பாக சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு மர்ம நபர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலத்தை டிராக்டர் மூலம் உழதனர்.இதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

News May 20, 2024

கடலூர் அருகே ஒரே நாளில் 100 திருமணங்கள்

image

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற இந்த தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டிக் கொள்பவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்குவந்து திருமணம் செய்து கொள்வர்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கோவில் திருமண மண்டபத்தில் 70 பேர், தனியார் திருமண மண்டபத்தில் 30 பேர் என மொத்தம் 100 திருமணங்கள் நடைபெற்றது.

News May 20, 2024

கடலூர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (20.5.24) அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

கடலூரில் புதிய கார் அறிமுக நிகழ்ச்சி!

image

கடலூர் முதுநகர் ஏ.பி.டி மாருதி கிளையில் ‘தி எபிக் நியூ ஸ்விப்ட்’ புதிய கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பிரவீன் ஐயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார். உடன் கிளை மேலாளர், கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News May 19, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (19/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயதேவி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாதுஉசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!