India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 2 நாட்களில் தமிழகம், இலங்கையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலைகளை உடைக்க பாமக முயற்சி என கடலூர் மாவட்ட காவல்துறையினர் பொய்யை பரப்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே என்றும் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை எங்கேனும் அவமதிக்கப்பட்டால் அதற்கான முதல் எதிர்ப்புக்குரல் வருவது என்னிடம் இருந்துதான் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் புதுக்குப்பம் எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் பாலாஜி மகள் சரண்யா (17). கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரண்யா இன்று செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது தாய் கல்பனா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

வன்முறையை ஏற்படுத்தும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக எடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (06.11.2024) பகல் 1 மணியளவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 152 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (05/11/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி கொளஞ்சி அம்மாள் (55). இவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன வேதனை அடைந்த கொளஞ்சி அம்மாள் இன்று விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் இனி திருப்பி தர இயலாது. அவை அரசின் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என கால்நடை உரிமையாளருக்கு கடலூர் மாவட்ட ஆட்சிய ர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம், சாலையோர பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.