Cuddalore

News June 12, 2024

கடலூர் இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி பயிற்சி பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 12, 2024

கடலூரில் மரக்கன்றுகள் நடும் விழா

image

ஈஷா யோக மையம் மற்றும் காவேரி குக்கரில் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி கடலூர் சின்ன காட்டு சாலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜாராம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில் தன்னார்வலர்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 12, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் வருகிற 15-ம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட தொடர்பான மனுக்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

கடலூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

image

கடலூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்ந்தது.ஆந்திரா பகுதியில் இருந்து கடலூருக்கு தினமும் தக்காளி வருவதுண்டு இந்த நிலையில் ஆந்திராவில் கடும் மழை காரணமாக கடலூருக்கு தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் கடலூர் பகுதிகளில் தக்காளியின் விலை கடந்த நான்கு நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து.தற்பொழுது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

News June 12, 2024

கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் 

image

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போஸ்டரில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும்,கழிவு நீரை விவசாய நிலங்களில் திறந்து விடுவதாகவும்,அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

News June 12, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை முழு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News June 11, 2024

இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் 

image

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், தேர்வு நடத்துவதில் இருந்து தேசிய தேர்வு முகமை (NTA)எனும் தனியார் நிறுவனைத்தை விளக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சிவானந்த் தலைமையில் நடைபெற்றது.

News June 11, 2024

கடலூர்: கலெக்டர் அறிவிப்பு!

image

சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள், சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சரால் விருது வழங்கப்படுகிறது. அதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2024ம் ஆண்டுக்கான சுதந்திர தின விருது பெற https://awards.tn.gov.in என்ற இணைய முகவரியில் ஜூன் 20ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 11, 2024

கடலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

வேப்பூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகின்ற 19ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டரால்   மனுக்கள் பெறப்படவுள்ளது . அதன்பிறகு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 11, 2024

கடலூர்: விடுதியில் தங்கி பயில கலெக்டர் அழைப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்லூரியில் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ பயிலும் மாணவர்களும் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.

error: Content is protected !!