India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடலூர் சன்மார்க்க சத்திய தருமசாலையின் 158வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று யோகாசன பயிற்சி மற்றும் இயற்கை உணவு குறித்து சிறப்பு நடைபெற்றது.இந்த சொற்பொழிவு ஓய்வு பெற்ற பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் அர்த்தநாரி நடத்தினார் பின்பு அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் கோடை மழை பெய்து வருகிறது. அதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் மின்சார உபகரண பெட்டிகளை தொட கூடாது. மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ , சேதமடைந்த மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பி, சேதமடைந்த ஸ்டே கம்பிகள் இருந்தாலும் 9498794987 என்ற அரசின் கட்டணமில்லா சேவை எண்ணில் தெரிவிக்கலாம் என கடலூர் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணி அளவில் எஸ்.பி. ராஜாராம் திடீரென வந்து பேருந்து நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டார்.அப்போது பேருந்து நிலையத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.எஸ்.பி.யுடன் வந்திருந்த அதிரடிப்படை போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
குறிஞ்சிப்பாடி தாலுகா வடலூரில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பட்டய படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https//scert.tnschool.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் பாலக்கரை, ஆலடி, மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(மே 22) காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (22/05/2024) கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ராகி வரத்து 1.99 மூட்டை மட்டும் வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடுபொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூர் வழியாக வாரம் இரு முறை இயக்கப்படும் வேளாங்கண்ணி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24ஆம் தேதி முதல், வேளாங்கண்ணியில் இருந்து சனி மற்றும் திங்கட்கிழமை மாலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில், கடலூர் முதுநகருக்கு 10.55 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூருக்கு 11.04 மணிக்கும் வந்து சேரும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை தனியார் ஆம்புலன்சில் வந்த நோயாளியை இறக்கிவிட்டதும் , அதன் உதவியாளர் 17 வயது சிறுவன் டிரைவர் உதவி இன்றி ஆம்புலன்ஸை இயக்கி உள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் கடலூர் முதுநகரை சேர்ந்த குமார் மனைவி உஷா (55), நெய்வேலியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி கமலா (26) ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.