India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 38 டிகிரி செல்சியஸ், புவனகிரி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 38 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 39 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 40 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 39 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மணவெளி பகுதியில் மாநகராட்சி ‘சிட்டி கிளீன்’ தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா.தாமரைச்செல்வன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில், பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை கலந்து கொண்டார்.
கடலூரில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக கோடை மழை விட்டு விட்டு பெய்தது. இதற்கிடையே ரமெல் புயல் காரணமாக கடலூரில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூரில் இன்று காலை 7 மணிக்கே சூரியன் சுட்டெரித்தது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதில் இன்று மட்டும் 101.1 டிகிரி வெயில் பதிவானது.
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (27/05/24) மணிலா வரத்து 0.12 மூட்டை, உளுந்து வரத்து 3 மூட்டை, நெல் (91) வரத்து 156.48 முட்டை, நெல் (சின்ன பொன்னி) வரத்து 20 மூட்டை, நெல் (வெள்ளை பொன்னி) வரத்து 9.47 மூட்டை வரத்து வந்துள்ளது. இது மட்டுமில்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூரில் அமைந்துள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது. 6ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த இக்கோயில் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசுகள் என பலரால் கட்டப்பட்டது. இந்த குறிப்புகள் இக்கோயிலில் கண்டறியப்பட்ட 50 கல்வெட்டுகளிடமிருந்து பெறப்பட்டவை. இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது.
கடலூர் மாநகர போக்குவரத்து போலீசார் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஒருவர், இருசக்கர வாகனத்தில் 3 பேராக அமர்ந்து சென்ற 21 பேர் உள்ளிட்ட 112 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம் விருப்பாட்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன். ஸ்ரீ அங்கமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்வதற்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு சவாரி செய்வதற்கான டோக்கன் கொடுப்பதை பகல் ஒரு மணியோடு நிறுத்தி விட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. வரும் வழியிலேயே சுங்க சாவடியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் திரும்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.