India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் உள்ளது. இந்த முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் மனோஜ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதியோர் இல்ல நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 38 டிகிரி செல்சியஸ், புவனகிரி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 38 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 41 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சர்வதேச அளவில் நாட்டிற்கு நற்பெயரையும்,புகழையும் பெற்றுத் தந்த விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.இதில் விளையாட்டு துறைக்கான 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது தொடர்பான விவரங்கள் https://.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று வைகாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 42 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4.6.2024 அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவித சம்பவத்திற்கும் இடமளிக்காத வகையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வகையில் வருகிற 4-ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மே.,31) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் ஜோதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த 28ஆம் தேதி துவங்கியது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த நீச்சல் பயிற்சி வகுப்பானது ஜுன் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6
சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரிய விருக்கின்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை எண்ணுவது தொடர்பான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்
தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
விளையாட்டுத்துறைக்கான 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் உரிய விபரங்களுடன் பதிவேற்றம் செய்து,அதன் நகலை,30.6.2024 அன்றைக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் அருண் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.