Cuddalore

News January 31, 2026

வடலூருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் நாளை (பிப் 1) தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடலூர் மண்டல போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன 31) முதல் 3 நாட்கள் (2.2.2026) வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருச்சி, மதுரை, கோவை, சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வடலூருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

News January 31, 2026

கடலூர்: ராணுவத்தில் வேலை- APPLY NOW

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 31, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,900 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. உரம் 2,655 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,730 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,748 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,541 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 20,653 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. இந்த உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

News January 31, 2026

கடலூர்: சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெள்ளைச்சாமி (60). இவர் நேற்று கச்சேரி ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.31) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

கடலூர்: சகல செளபாக்கியமும் கிடைக்க இங்கு போங்க !

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.

News January 30, 2026

கடலூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

பண்ருட்டி விவசாயி மீது தீ வைப்பு: இ.பி.எஸ் கண்டனம்

image

‘பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’ என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

கடலூர் மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

பண்ருட்டி விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்

image

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ராஜேந்திரன் என்ற விவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று அன கூறியுள்ளார்.

error: Content is protected !!