India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கடலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்க உள்ளது. இந்த நிலையில் கடலூர் தொகுதியில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மேஜையிலும் 1 மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் மற்றும் 1 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 56 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூரில் லோக்சபா தேர்தல் (ஏப்.19) முடிந்து வாக்குப்பெட்டிகள் கடலூர், தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கப்படும். தொடர்ந்து கடலூர் மற்றும் நெய்வேலி தலா 17, விருத்தாசலம் 21, பண்ருட்டி 19, திட்டக்குடி 18 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மேற்பார்வையில் சீல் அகற்றப்பட்டது.மேலும் கடலூர் நாடாளுமன்ற வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் காலையிலிருந்து கூட்டமாக செல்கின்றனர்
2024 மக்களவைத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 72.28% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் விஷ்னு பிரசாத்(காங்.), அதிமுக சார்பில் சிவக்கொழுந்து(தேமுதிக), பாஜக சார்பில் தங்கர் பச்சானும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
கடலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் ஏ.எஸ்.பி.க்கள் அசோக்குமார், அர்னால்டு ஈஸ்டர், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 12 டி.எஸ்.பி.க்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் மற்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜுன் 3) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் ஜெரினா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் கடலூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் 1,43,983 (13.86%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விஷ்ணு பிரசாத்தும், அதிமுக – தேமுதிக கூட்டணியில் சிவக்கொழுந்தும், பாஜக – பாமக கூட்டணியில் தங்கர் பச்சானும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனால் கடலூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் தேவனாம்பட்டினம் ஆர்.சி. பாலத்திலிருந்து இடது புறமாக காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் வழியாக மையத்திற்கும், மற்றவர்கள் பாலத்திலிருந்து வலது புறமாக பார்க்கிங் செல்ல வேண்டும் என எஸ்.பி.ராஜாராம் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜுன்., 2) மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் திட்டக்குடியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.