India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11.45 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ஆம் சுற்று முடிவடைந்த நிலையில், 5ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நண்பகல் 12.10 மணி நிலவரப்படி பா.ம.க – 52,371 வாக்குகள் பெற்றுள்ளது. இதையடுத்து கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்து வருகிறார்.
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 5 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் -129100, தேமுதிக -83058, பாமக -50820, நாதக -15435 வாக்குகள் பதிவாகியுள்ளது. 46042 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 43,484 வாக்குகளுடன் 10,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 33,078 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 13,255 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,371 வாக்குகள் பெற்றுள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 4 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை.கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 101379 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.அவரை அதிர்ந்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 69650 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
31729 வாக்குக்கள் வித்தியாசத்தில் -காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இன்று காலை 10.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் – 1,06,263 வாக்குகளும்,
தே.மு.தி.க வேட்பாளர் சிவக்கொழுந்து – 67,819 வாக்குகளும்,பா. ம. க வேட்பாளர் தங்கர் பச்சான் – 31,511 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 13,582 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவடைந்த நிலையில், 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி – 38820, தேமுதிக – 27286, பாமக -14520, நாதக – 5129 இதுவரை பெற்றுள்ளது. இதில், 11534 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 25,228, தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 19,653, பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 11195, நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 3151 வாக்குகள் பெற்றுள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி 5575 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது
சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார்.தற்போது திருமாவளவன் 4000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4717, தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2567, பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 1961, நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 527 வாக்குகள் இதுவரை பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.