India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் வாரிசுகள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்காக, கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 மாத கால இலவச பயிற்சியானது இன்று முதல் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் பாரமரிப்பை கண்காணிக்கவும், அவர்களை பாதுகாத்து வழிநடத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு மருத்துவமனையுடன் இணைந்து ஆட்சியர் அருண்தம்புராஜ் ‘வம்சம்’ஹாட்லைன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, திருமணமாகாத கர்பிணிகள் மருத்துவ பரிசோதனை, சந்தேகங்களுக்கு 75985 12045, 75985 12042 என்ற எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை7) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (ஜூலை 7) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் 2ஏ பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு மாவட்ட மைய நூலகர் சக்திவேல் வரவேற்பு உரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நீங்கள் அனைவரும் நாளைய அதிகாரிகள் ஆக வேண்டும் அதற்கு நீங்கள் அதிகப்படியான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சிவசங்கர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று (ஜூலை 6) கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வெறித் தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி, இன்று கடலூரில் 32 டிகிரி செல்சியஸ், சிதம்பரத்தில் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரியில் 33 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயிலில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலியில் 33 டிகிரி செல்சியஸ், விருத்தாசலத்தில் 34 டிகிரி செல்சியஸ், திட்டக்குடியில் 34 டிகிரி செல்சியஸ், மற்றும் குறிஞ்சிப்பாடியில் 33 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சிவசங்கர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்று (ஜூலை 6) கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வெறித் தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூரில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு பேசுகையில், கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறைக்கு 7418846100 என்ற எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார். மேலும் கஞ்சா விற்பனையில் அதிகாரிகள் மீது தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடலூர் மாவட்டத்தில் பிரசவகால தாய்சேய் பராமரிப்பை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், ‘வம்ஸம் ‘ ஹாட்லைன் எனும் திட்டத்தினை ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணிகள் 24 மணி நேரமும் பிரசவம் தொடர்பான சந்தேகங்களை 75985 12045, 75985 12042 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.