India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவர் சின்னம்மாள்(55). இவர் தனது மகன் ஆறுமுகம் (35), மகள் அம்சவல்லி ஆகியோருடன் நேற்று வேப்பூருக்கு வந்து பின், மீண்டும் பைக்கில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சின்னம்மாளின் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். மற்ற 2 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் பருவமான நடப்பு கரீப்- 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை விவசாயிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகள் நெல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

‘இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்’ என்றும் தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பா? பாசிசத்தின் காலடியில், மக்கள் ஜனநாயகமா? என்று தவாக தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாமிதுரை என்பவரது மனைவி அசோதை (60). இவர் தனது ஊரைச் சேர்ந்தவர்களுடன் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றார். மாலை 6 மணியளவில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி திருக்காமு தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (34). ‘சவுண்டு சர்வீஸ்’ கடை நடத்தி வரும் இவர் தனது பைக்கில் அரசூர் சாலை வழியாக சென்றபோது எதிரே வந்த ஆட்டோ, யுவராஜ் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.