Cuddalore

News January 8, 2025

குடியரசு தினம்: சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்- ஆட்சியர்

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, விழா நடக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை ஜன.26 அன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கடலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 8, 2025

கடலூர் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய ஆமை

image

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடந்த சில நாட்களாக அரியவகை ஆமைகள் முட்டையிடுவதற்காக ஏராளமாக கடற்கரைக்கு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் ஒரு ஆமை இறந்து கரை ஒதுங்கியது. இதை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் அந்த ஆமையை கைப்பற்றி அதனை கடற்கரையில் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 8, 2025

காட்டுமன்னார்கோயில் அருகே லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த மணியம்ஆடூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக்(64) என்பவர் நேற்று மாலை மேல தெருவில் வீட்டின் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக முதியவர் மாலிக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலின் பெயரில் போலீசார் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2025

கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு 8 நாள் விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கலையொட்டி அரசு விடுமுறையாக வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து 18, 19 முறையே சனி, ஞாயிறு என்பதால் கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பொங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

News January 7, 2025

கடலூரில் 10ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10.1.2025 அன்று நடக்கிறது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளது. அதனால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 7, 2025

திட்டக்குடியில் அதிக பெண் வாக்காளர்கள் 

image

புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்க முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். இதில் திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,08,964 பெண் வாக்காளர்கள் 1,13,420 இதரர் 2 என மொத்தம் 2,22,386 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 7, 2025

பரங்கிப்பேட்டை: கரும்பு விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்திருப்பவர்கள் தங்களது கரும்புகளை விற்பனை செய்ய வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி செல் 7904946740 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆதித்ய செந்தில்குமார் நேற்று அறிவித்துள்ளார்.

News January 7, 2025

சிதம்பரம்: சாலை விபத்தில் இறந்த எஸ்ஐக்கு அரசு மரியாதை

image

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பலியான சப் இன்ஸ்பெக்டர், உடலுக்கு, இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. எஸ். பி., ஜெயக்குமார், டி.எஸ். பி.,க்கள் லாமேக், விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண் சப் இன்ஸ்பெக்டர் உடலுக்கு, காவல்துறை சார் பில், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, உடல் தகனம் செய்யப்பட்டது

News January 7, 2025

கடலூர்: மாவட்ட கிரிக்கெட் போட்டி வரும் 12ம் தேதி துவக்கம்

image

கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு பணிகளுக்கான மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் நெல்லிக்குப்பம் சிதம்பரம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

News January 7, 2025

காட்டுமன்னார்கோவில்: பேருந்து கண்ணாடி உடைப்பு

image

காட்டுமன்னார்கோவில் வில்வகுளம் செட்டி தெரு வழியாக அரசு பேருந்து வந்தது. பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் புறப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரக்கண்ணன் என்பவர் குடிபோதையில் கல் வீசி பேருந்தில் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.

error: Content is protected !!