Cuddalore

News June 22, 2024

கடலூரில் தள்ளுமுள்ளு

image

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி பகுதியில் விஷசாராயம் அருந்தி உயிரிழப்பை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்பொழுது, போலீசார் இதற்கு அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

News June 22, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கடலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 22, 2024

சேவை புரிந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை புரிபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு விருது பெற தகுதியானவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூன் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

News June 22, 2024

கடலூரில் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலனாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

News June 22, 2024

கடலூர் நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம்

image

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கடலூர் பார் அசோசியேஷன், லாயர்ஸ் அசோசியேஷன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கடலூர், ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுச்சேரி இணைந்து கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் உத்தரவின் பேரில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

News June 22, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

image

குறிஞ்சிப்பாடி அடுத்த சின்னதானங்குப்பம் கிராம மக்கள் இன்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு இடையே மொபைல் டவர் அமைக்கப்படுகிறது. இதனால் கதிர்வீச்சால் மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மொபைல் போன் டவர் அமைக்கும் பணியை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News June 21, 2024

கடலூரில் சர்வதேச யோகா தினம் 

image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலூரில் பல்வேறு பொது இடங்களில் மற்றும் பள்ளிகளில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு யோகா பயிற்சியினை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களோடு யோகா செய்து மகிழ்ந்தார்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் உடன் இருந்தார்.

News June 21, 2024

கடலூர் அருகே 3 பேர் கைது 

image

கடலூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் நேற்று சிதம்பரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சிதம்பரம் அருகே உள்ள அத்தியாயநல்லூர் கிராமத்தில் வந்த மினி லாரியை பரிசோதித்தனர்.  அதிலிருந்த டிரைவர்ஓட முயற்சி செய்தார்.அவரை பிடித்து விசாரிக்கையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்கள் சுமார் 1100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது.மேலும் அந்த 3 நபர்கள் கைது

News June 21, 2024

கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

image

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதலாம் கட்ட கலந்தாய்வு கடந்த 14.6.2024 வரை நடந்தது. இந்த நிலையில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு வருகிற 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

கடலூர் படை வீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு  குறைத்தீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனால் இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!