India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், தலைமையில் இன்று (27.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா தொடர்பாக கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 11ஆம் தேதி அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விவரங்கள் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜூன் 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பில், கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள், கஞ்சா,குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், ஈடுபடும் நபர்கள் இடம் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7418846100, 9080731320, 10581 எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பில், கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள், கஞ்சா,குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், ஈடுபடும் நபர்கள் இடம் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7418846100, 9080731320, 10581 எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்னிந்திய அளவிலான கபடி போட்டி, கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடியில் நடைபெற்றது. இதில் உண்ணாமலை செட்டியைச் சார்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி 2 ஆம் இடம் பிடித்து ரூ.30,000 பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வென்றது. இதை அடுத்து வெற்றி பெற்ற உண்ணாமலை செட்டி சாவடி ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 26) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (26/06/2024) புதன்கிழமை எள் வரத்து 2.65 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
உலக போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.இராஜாராம் தலைமையில் போலீசார் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இதில் டி.எஸ்.பி.க்கள் சௌமியா, நாகராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், தனிபிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 22 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.இந்த பணியிடம் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்
Sorry, no posts matched your criteria.