Cuddalore

News August 2, 2024

திருப்பாதிரிப்புலியூருக்கு இன்று சிறப்பு ரயில்

image

தாம்பரத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் வரை இன்று இரவு (ஆகஸ்ட்.2) சிறப்பு ரயில் உள்ளது. தாம்பரத்தில் நாளை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் 12 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட மெமு ரயில் விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், தஞ்சாவூர், பூதலூர் வழியாக மறுநாள் காலை 6.40க்கு திருச்சி சென்றடையும்.

News August 2, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, கடலூர் மாவட்டம், வேப்பூரில் 2 செ.மீ., காட்டுமைலூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மழையினால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

News August 1, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 1, 2024

வெள்ள தடுப்பு பணி: கலெக்டர் ஆய்வு

image

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டுர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள ஏய்யலூர் மற்றும் அணைக்கரை பகுதியில் வடக்கு ராஜன் கால்வாய் வெள்ள தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

News August 1, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/08/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 1, 2024

தலைமை காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

image

மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டி கோயம்புத்தூரில் நடந்தது. இதில் நெய்வேலி காவல் நிலைய தலைமை காவலர் ராஜேஸ்வரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தேர்ச்சி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் இவரது மகன் மோனிஷ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். அவர்களை இன்று கடலூர் எஸ்.பி. ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

News August 1, 2024

கடலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு மற்றும் பாண்டிச்சேரி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், கடலூர் முதுநகர் நாராயண சேஷ மஹாலில் வரும் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9842321486 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை ஷேர் செய்யவும்.

News August 1, 2024

கடலூரில் சைக்கிள் பொருத்தும் பணி தீவிரம்

image

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவச சைக்கிள் ஆண்டு தோறும் வழங்குகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்காக இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வரவழைக்கப்பட்டு, கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News August 1, 2024

மாணவனின் உடலுக்கு தாசில்தார், டிஎஸ்பி அஞ்சலி

image

வடலூர் சீயோன் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் ஈட்டி தலையில் பாய்ந்து மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோர்(15) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன், நெய்வேலி டி.எஸ்.பி. சபிபுல்லா ஆகியோர் நேற்று மாணவனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

News August 1, 2024

மத்திய அமைச்சரிடம் கடலூர் எம்பி மனு

image

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்தார். அதில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத், தேஜாஸ் மற்றும் ஹம்சபார் விரைவு ரயில்கள் நின்று செல்லவும், விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரயிலை விருதாச்சலம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

error: Content is protected !!