India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் ஜூலை 13ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான மனுக்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம், மங்களூர், நல்லூர் ஆகிய 14 ஊராட்சிகளில் உள்ள 683 கிராம பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு திட்டத்தின்கீழ் வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 91 முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சியின்போது பக்தர்கள் கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கனகசபை விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி, அறநிலையத்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணைமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை(ஜூலை.11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை பூங்குணம், நத்தப்பட்டு, சேத்தியாத்தோப்பு, வடக்குத்து, கீழக்குப்பம் ஆகிய துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூலை.11), நாளை மறுநாள் (ஜூலை.12) நடைபெறுகிறது. இதில் கட்- ஆப் 400 மதிப்பெண்களில் இருந்து 140 மதிப்பெண்கள் வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்விற்கான (SGT) முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் ஒன் பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 662 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை 9 மணி வருகை புரிய வேண்டும், ஹால் டிக்கெட்டுடன் வர வேண்டும், ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டுவர வேண்டும் என கடலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் எடக்குப்பம், அகரம், கொம்பாடிக்குப்பம, விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம கரும்பு விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர். அதில், சிறப்பு பட்டத்தில் சாகுபடி செய்த கரும்பு பயிரை ஆலைகளுக்கு வெட்டி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்நிலையில், இன்று நடந்த குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீடு, பட்டா, தையல் இயந்திரம், வேலை வாய்ப்பு உள்பட மொத்தம் 740 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை கடலூர் மாவட்ட அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினர் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சிகளில் சிதிலமடைந்து போன குடிநீர் குழாயை அகற்றிவிட்டு, புதிய பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பான குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.