India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 11 மணி வரை பெய்ததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கீழச்சேர்வை பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லக்கூர் பகுதியில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூரில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவிலரில் வந்த 2 பேரிடம் ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர்கள் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் வைக்க கொண்டு செல்வதாக கூறினர். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் வந்து உரிய ஆவணத்தை காண்பித்ததால் பணத்தை திருப்பி ஒப்படைத்தனர்.
கடலூர், மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு கல்விக்கடன் எளிதில் கிடைத்திட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் உட்பட்ட சில மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில் இரவு குளிர்ச்சியான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் நாளை (ஜூலை.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என கடலூர் ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 11) கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்பிராஜ் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்ச்சங்கங்கள் வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான விருதுக்கு www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தன்விவரக் குறிப்புடன் நிழற்படம் மற்றும் தமிழுக்கு ஆற்றிய பணி குறித்த விவரங்களுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பிரதான இணைப்பு சங்கமான தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் வேதாந்த தேசிக ராமானுஜம் ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்றதால், கடலூர் BEO அலுவலகத்தில் பணிபுரியும் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தேவ.முரளி தலைவராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து புதியதாக பொறுப்பேற்ற தேவ.முரளிக்கு சங்க நிர்வாகிகள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசு வீர தீர செயல்புரிந்த பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கி வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் வீர தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் விருது பெற https://awards.tn.gov.in என்ற தமிழக அரசின் விருது இணையத்தில் 15.7.2024 க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (ஜூலை 10) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அய்யனார், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.