India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், நாளை நெய்வேலி தொ.மு.ச. அலுவலகத்தில், திமுக மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி வாகனத்தை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் குடிநீர் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்துக்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுனர் பணியிடத்திற்கு தகுதி உள்ள நபர்கள் ஆக.16 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 வயது முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என கலெக்டர் இன்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஆக.15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மைதானத்தில் போலீசார், என்.சி.சி., ஜே.ஆர்.சி. மாணவர்கள், ஊர்க்காவல் படை, தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினர்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 24 போடி செட்டி தெரு மற்றும் வார்டு 25-ல் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல இடங்களில் கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐ.ஏ.எஸ், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வெங்கனூரில் உள்ள ரைஸ் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் (27) என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் உமி ஏற்றி வந்த லாரி ஒன்று ரிவர்ஸ் எடுக்கும் போது அங்கு நின்றிருந்த ராஜ்குமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலை நசுங்கி ராஜ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
RCD (Residual Current Device) கருவி என்பது, மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்இணைப்பை துண்டித்து மின்விபத்தில் இருந்து பாதுகாக்கும் கருவியாகும். இதனால், உயிரிழப்புகள் தடுக்கப்படும். எனவே கடலூர் மாவட்ட மக்கள் புதிய மின் இணைப்புகளில் RCD பொருத்தாவிட்டால் மின் இணைப்பு வழங்கப்படாது. பழைய மின் இணைப்புகளில் இதை பொருத்த வேண்டும் என கடலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று (12.08.24) கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பொதுமக்கள் உதவித்தொகை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்கள் அளித்தால், அதனை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். இது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தனசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.