Cuddalore

News August 15, 2024

புவனகிரி டிரைவரை கடத்தியவர் கைது

image

ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News August 14, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (14/08/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 34 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 14, 2024

கடலூர்: சுதந்திர தின விழாவுக்கு கலெக்டர் அழைப்பு

image

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்ததும், நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்

News August 14, 2024

அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

மூவர்ணத்தில் ஜொலிக்கும் கடலூர் கலெக்டர் அலுவலகம்

image

நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக கலெக்டர் அலுவலகம் முழுவதும் மூவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் கலெக்டர் அலுவலகம் அனைவரையும் கவரும் வகையில் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.

News August 14, 2024

கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள்

image

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள் 4 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ?

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கடலூர் காவலருக்கு சிறப்பு பதக்கம்

image

இந்தியாவின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை கண்காணிப்பாளர் ச.சௌமியாவுக்கு நாளை சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது.

News August 14, 2024

உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

image

நெல்லிக்குப்பம் பள்ளமேட்டு தெருவை சேர்ந்த ஜோதி என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

News August 14, 2024

பண்ருட்டி எம் எல் ஏ அறிக்கை வெளியிடூ

image

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், வருகின்ற மழைக்காலத்தில் பணிக்கு வருவதற்கு ஏதுவாக ரெயின் கோட் விரைந்து வழங்க வேண்டும் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எம்எல்ஏ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!