Coimbatore

News January 9, 2026

கோவையில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கோவை: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

கோவை மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

கோவை வரும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

image

தேசிய தலைவராக பொறுப்பேற்றதுமே புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த மாதம் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இரண்டாவது முறையாக நாளை (ஜன.10) தமிழகம் வருகிறார். நேரடியாக கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். நாளை மாலை கோவை வந்தடையும் அவர் இரு நாட்கள் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

News January 9, 2026

கோவை: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

கோவை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

கோவை: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

News January 9, 2026

கோவையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: காரணம் என்ன?

image

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதலட்சுமி (23). இவருக்கு 18 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று உடல் நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சோதனை செய்த போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 9, 2026

கோவை: டிக்கெட் வேணுமா..‘Hi’ சொல்லுங்க

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)

News January 9, 2026

கோயம்புத்தூரை அதிர வைத்த கொலை

image

கோவையைச் சேர்ந்தவர் ஐயப்பன் (எ) பிரவீன் குமார் (24). மைசூரில் வேலை செய்து வந்த இவர் நேற்று முன் தினம் கோவைக்கு வந்துள்ளார். அப்போது கெம்பட்டி காலணியில் நண்பர்களுடன் சேர்ந்து முட்புதரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை கல்லால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 9, 2026

POWER CUT: கோவையில் எங்கெல்லாம் மின்தடை

image

கோவையில் இன்று (ஜன.9) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி. கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் பகுதியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News January 9, 2026

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (67). இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!