India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்(22). தனியார் சலூன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு பைக்கில் குருந்தமலை கோவிலில் நடைபெற்று வரும் தேர்த்திருவிழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். குரும்பனூர் அருகே சென்ற போது எதிர்பாராதமாக சாலையோர கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுக்கரை வனச்சரகத்தில் பூலாம்பட்டி நவக்கரை வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இன்று பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது வனத்துறையினரின் ரோந்து பணியில் தெரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிற்கு தகவல் அளித்தார். பிரேத பரிசோதனைக்கு அறிக்கை பின்னரே யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா இன்று நடைபெற்று வருகிறது. குண்டம் இறங்கும் இடத்தின் அருகே இளநீர் வியாபாரம் செய்யும் இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக ராஜன் என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனிப்பதே முதல் கடமை என தெரிவித்தார். இதனால் 6 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

காரமடை அடுத்துள்ள பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நள்ளிரவு பரளிக்காடு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது, ஆக்ரோஷமான யானை தாக்கியதில் சிவக்குமார்(45) என்ற பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.