India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை காந்திபுரம், மில் ரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு ஒரு சிறிய முருகன் சிலை வைக்கப்பட்டது. இது நேற்று உடைந்து இருந்தது.
இதனை பார்த்த பக்தர்கள் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடைக்கப்பட்ட கல் சிலையை மீட்டு விசாரித்து வருகின்றனர். இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் வண்ணம் 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை இன்று (மார்ச்.26) உருவாக்கி உள்ளார்.
மேலும் இதற்காக இரண்டு நாட்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மார்ச்.26) மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது
கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் கடந்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதயக்கோளாறு , ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் ஏப்.19 ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (மார்ச்.25) கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தேனியைச் சேர்ந்த பாண்டியன்(40) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இம்மலையில் கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன், ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த சுப்பா ராவ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்றார். இதில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவையில் போட்டியிட இன்று அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று (மார்ச்.24 ) கிரிமலை யாத்திரை சென்ற சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் உயிரிழந்தார். இதேபோல் ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியை சுப்பா ராவ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வழியாக செல்லும் கேரள ரயில்கள் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்தான செய்தி குறிப்பில், மார்ச் 26, 28, 30 ஆம் தேதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் வருவது தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.