India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி, கோவை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் சிபிஐஎம் போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுக போட்டியிடுகிறது. பொள்ளாச்சி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கே.ஷாமுகசுந்தரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் இன்று பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று கூறினார். மேலும் அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கரடிமடை சுற்றுக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம், கரடிமடை, பேரூர், போஸ்டல் காலனி ஆறுமுககவுண்டனூர் ஹைடெக் சிட்டி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.
சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன்படி, அண்ணா சிலை சிக்னல் அருகே இருந்த பெருந்தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டது. மேலும் பல்வேறு மேம்பாலங்களில் வரையப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை கோவை முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
கோவையில் நாளை (மார்ச்.18) பாஜக சார்பில் பிரதமரின் ரோட் ஷோ நடைபெற உள்ளது. ரோட் ஷோ நடைபெறும் வழி முழுவதும் பாஜகவினர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் யுஎம்டி ராஜா, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாஜகவின் சின்னமான தாமரையில் மோடியின் உருவத்தை வரைந்து வெல்கம் மோடி ஜி எனவும், மலர்ந்த முகமே வருக எனவும் வரைந்து அசத்தியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல்-2024 தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை வழங்கிட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.
தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தேர்தல் நடத்தை பணிகள் இன்று துவங்கியுள்ளன. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் போட்டோ கேலரியில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. கோவையில் அனைத்து அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டது. மேலும், தேர்தல் வாகனங்களில் கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.