India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் அழகப்பா சாலையில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க, சுகுணாபுரம் பகுதியில் வசித்து வரும் 102 வயது மூதாட்டி முத்தாயம்மாள் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் உதவியுடன் வீல் சேரில் வந்து வாக்களித்தார். இதை பற்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாவது, வாக்களிப்பது என்னுடை உரிமை என்று மூதாட்டி கூறியதாக தெரிவித்தனர்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இன்று (ஏப்ரல். 19)கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அனைத்து குடிமகன்களும் தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு G-Pay மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, திமுக வழக்கறிஞர் அணியினர் சார்பில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்திகுமார் பாடியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக குறிஞ்சி எனும் தலைப்பில் கோடை கால முகாம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முகாம் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், அறிவியல், கலை, மற்றும் சமுக அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள பல்வேறு சந்தேகங்களைத் புரிய வைக்கும் நிகழ்ச்சியாக நடைபெறும் என இன்று கூறப்பட்டுள்ளது.
கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து புகார் அளித்தனர்.
கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இன்று புகார் மனு அளித்தார். அதில், அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <
Sorry, no posts matched your criteria.