Coimbatore

News April 25, 2024

கோவை: பாதிக்கப்பட்டவரை மிரட்டியவர்கள் கைது

image

பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல கூறி மூவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் மேற்கண்ட மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

பராமரிப்பு பணிகளுக்காக நவீன இயந்திரங்கள்

image

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.07 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்ட பராமரிப்பு பணிகளுக்காக 15 வது மத்திய நிதி குழு மானியம் 2023 – 24 திட்டத்தின் கீழ் ₹96.60 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஜெட்டிங் மெஷின், இரு டி – சில்ட்டிங் மெஷின்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

கோவை: நாளை தொடங்கும் செமஸ்டர் தேர்வு

image

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் நாளை (ஏப்.24) முதல் நடைபெற உள்ளது. வழக்கமாக தேர்வுகள் ஏப்ரல் மாத துவக்கத்தில் துவங்கி இறுதியில் முடிந்து விடும். ஆனால், நடப்பாண்டில் மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மே.5ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 24, 2024

தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

image

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி, கடந்த மார்ச் 16ஆம் தேதி நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்ட தெற்கு கோவை சட்டசபை அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு, எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று கடிதம் எழுதியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தெற்கு கோயம்புத்தூர் தொகுதியில் சமூக சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

போக்குவரத்தை சீரமைக்கும் பணி – போலீசார் அழைப்பு

image

கோவை மாநகர காவல்துறை இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் டிராபிக் வார்டன் அமைப்பில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம், டிராபிக் வார்டன் அலுவலகத்தில் 27, 28ம் தேதிகளில் இலவசமாக பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

News April 24, 2024

கோவை: கோழி விலை உயர்வு, கிலோ ரூ.250 விற்பனை

image

கோடை காலங்களில் வெப்பம் காரணமாக கோழி உற்பத்தி பாதிக்கப்படும். இந்த காலங்களில் கோழிகள் உணவு உண்ணுவதை குறைத்து நீரை அருந்துவதை மட்டுமே அதிகம் செய்யும் என்பதால் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், இன்று (ஏப்ரல்.23) கோவை மாநகரின் பல இடங்களில் கோழி இறைச்சி கடைகளில் 1 கிலோ கறி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News April 24, 2024

அரசு மருத்துவமனையில் திருட்டு, பிளம்பர் கைது

image

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து பந்தய சாலை காவல்துறையினர் நடத்தி நேற்று (ஏப்ரல்.22) அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ் (28) என்பவர் திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 24, 2024

வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய மலை ஏறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் மலை ஏறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் என்ற இளைஞர் மலை ஏறி விட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

News April 24, 2024

மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

image

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (82) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப். 7 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த அவருக்கு சிறை மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின், மேல் சிகிச்சைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.

News April 24, 2024

கோவையில் 104 டிகிரி வெயில் பதிவானது

image

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே கோவையில் கடந்த பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தயங்குகின்றனர். மாலை 5 மணிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறைகிறது. இந்நிலையில், கோவையில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!