India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேரூர் செல்வ சிந்தாமணி புதூர் பகுதியை சேர்ந்த நகை வியாபாரிகளான ராஜேந்திரன், சாந்தகுமார் கடந்த 22 ஆம் தேதி டூவீலரில் காந்திபுரம் சென்றுள்ளனர். அப்போது, குளக்கரையில் காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் டூவீலர் மீது மோதி விட்டு கத்தி, கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் நேற்று வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊஞ்சபாளையத்தில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப்ரல். 24) நடைபெற்றது. சோமனூர் அருகே ஊஞ்சபாளையத்தில் கிராமத்தில்
உள்ள மாகாளியம்மன் திருக்கோயில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதில் ஊஞ்சபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பெருமாள் கோவில் பதி பகுதியில் உள்ள ஆற்று படுகையில் இன்று (ஏப்.24) குளிக்க சென்ற பிரவீன் (17). கவின் (16), தர்ஷன் (17) ஆகிய 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 3 பேர் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ், இந்தியாவின், 100 இடங்களில், ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு வழங்கும் ‘உணவு வீதிகள்’ திட்டத்தை மத்திய அரசு, உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைய குழு மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உணவு வீதி அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஜூன் 4க்கு பிறகு, கோவை மக்கள் இங்கு சுவையான உணவு வகைகளை அருந்தலாம் என்று தகவல் இன்று வெளியாகி உள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள்தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும்” என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சூலூர் அடுத்துள்ள கலங்கல் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருபவர் செல்வராஜ். இவர் அவரது மில்லின் அருகே உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் நேற்று செல்வராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் இன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
கோயம்புத்தூரில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது ஆழியார் அணை. வேளாண்மை மற்றும் பாசன வசதிக்காக 1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே இவ்வணை கட்டப்பட்டது. 81 மீட்டர் உயரம் கொண்ட ஆழியார் அணைக்கட்டின் கீழ் படகுசவாரியும் பூங்காவும் உள்ளது. ஆனைமலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளை உள்ளடக்கி, 37 கி.மீ வரை பாய்ந்து கேரளாவின் பாரதபுழா ஆற்றில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டியன், அருள்குமார், வசந்தகுமார் உள்ளிட்ட மூவரும் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி வியூ பாயிண்ட் சென்றுள்ளனர். அங்கு காரில் வந்த கும்பலுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் மூவர் மீதும் காரை ஏற்றியதில் பாண்டி பலியானார். இவ்வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரசிங் உட்பட 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.