India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுதாகர் பெரும்பாலும் பகல் வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை அருந்தாமல், இளநீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்த வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வர்பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை (9.3.25) மகளிர் வேலை வாய்ப்பு முகாம் சூலூர், செஞ்சேரிமலை தவத்திரு மாரிமுத்து அடிகளார் திருநாவுக்கரசு நந்தவனம் மடத்தில் நாளை (09-03-2025) காலை 8 மணியளவில் துவங்க உள்ளது. வேலைவாய்ப்பு இல்லா பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அழைப்பு விடுத்துள்ளார். (Share பண்ணுங்க)
கோவை மாநகரில் சில நாட்களுக்கு முன் 18 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து மாநகரின் வெவ்வேறு ஸ்டேஷன்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த 170 போலீசார் மற்றும் வேறு ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் கேட்டு விருப்ப மனு அளித்தனர். மனு அளித்த 208 பேர் உட்பட 378 பேரை, மாநகருக்கு உள்ளேயே பணியிட மாற்றம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் வழக்கறிஞர் காா்வேந்தன் எழுதிய ‘கொங்கு ரத்தினங்கள்’, ‘கொங்கு மாமணிகள்’ நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கொங்கு நூலை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், தனியார் நிறுவனங்களின் செயல் இயக்குநா் ராஜ்குமாா் பெற்றுக்கொண்டாா். இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு காரணம் ஆன்மிகம் என்றார்.
கோவை பீளமேட்டில் செயல்படும் தனியார் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்வித்துறை (ம) சுகாதாரத்துறை அறிவுரைப்படி பள்ளிக்கு மார்ச்.8 முதல் 12ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க குழந்தைகளுக்கு யாருக்கேனும் பொன்னுக்கு வீக்கி பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவர்கள் ஆலோசனை பெறவும். (SHARE பண்ணுங்க)
கோவை மாவட்டத்தில் இன்று (07.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழன் தொலைக்காட்சி மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்ற நிகழ்விற்காக கோவைக்கு இன்று வருகை புரிந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜனை கோவை விமான நிலையத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் உறுப்பினர் வெங்கடகிருஷ்ணன் பொன்னாடை போற்றி வரவேற்றார். அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் உடன் இருந்தார்.
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று கூறியுள்ளதாவது: மார்ச் 11ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை கண்டிப்பாக பரவலாக இருக்க வாய்ப்பே இல்லை. அனைத்து பகுதிகளிலும் மேகமூட்டத்தை எதிர்பார்க்கலாம், மழை ஆங்காங்கே மட்டுமே தான் இருக்கும். தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியரகம், வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை,பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம்,அரிசி கார்டாக மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி மக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலையறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 15,000+ காலி பணியிடங்கள் நிரப்பவுள்ளன. 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், 0422-2642388, 94990-55937 என்ற எண்ணை அழைக்கவும். வேலை வாய்ப்புகளை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.