Coimbatore

News April 24, 2024

மனஉளைச்சலை ஏற்படுத்தும் கருத்துக்கணிப்பு

image

மக்களவை தேர்தல் நடந்த ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வருகிறது. இந்த அழைப்பில் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் ? அதிமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும், திமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும் என கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

News April 22, 2024

கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை – 10 பேர் கைது

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜோஸ்மோன், நண்பர்கள் விஜின், சுஜின் உள்ளிட்டோருடன் மதுக்கரையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே டூவீலர் நிறுத்துவதில் அப்பகுதியை சேர்ந்த தனுஷ் குமாரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜின் அடித்து கொல்லப்பட்டார். இப்புகாரின் பேரில் தனுஷ் குமார், சிறுவன் உட்பட 10 பேர் கும்பலை நேற்று கைது செய்தனர்.

News April 22, 2024

பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல். 21) நடைபெற்றது. நிகழ்ச்சி அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி (ம) ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 21, 2024

அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம்

image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் வாக்குகள் மாயமாகி உள்ளது எனக் குற்றம்சாட்டினார். இதற்கு கோவை ஆட்சியர் இன்று விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

News April 21, 2024

கோவை – பரௌனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

கோவை – பரௌனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

ஒர்க் ஷாப்பில் பயங்கர தீ விபத்து

image

கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.

News April 21, 2024

ஒர்க் ஷாப்பில் பயங்கர தீ விபத்து

image

கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.

News April 21, 2024

கறிக்கடை மூடப்படும், மாநகராட்சி நிர்வாகம்

image

இன்று, (ஏப்ரல் 21, 2024) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று கோவை மாநகரில் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் என்று தெரிவித்துள்ளார். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 20, 2024

கோவை: ஆட்சியர் முன்னிலையில் சீல்

image

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார்.

error: Content is protected !!