India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வேளாண் கல்லூரியில் வரும் மே.6, ஜூன்.1 உள்ளிட்ட தேதிகளில் 7 – 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கணினி திறன்களை கற்க கோடைக்கால சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி அரைநாள், முழு நாள் அளவில் நடத்தப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 97899-82772, 94420-78081 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என வேளாண் பல்கலை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று கூறினர்.
சித்தநாயக்கன்பாளையத்தில் நேற்று பொதுக் குழாயில் குடிநீர் பிடித்த பொதுமக்களை திமுகவினர் தாக்கினர். சித்தநாயக்கன்பாளையத்தில்
பொதுக்குழாயில் பொதுமக்கள் குடிநீர் பிடிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திமுகவைச் சேர்ந்த ஒரு சிலர் வரிசையில் நிற்காமல் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கே நின்று கொண்டிருந்த பொது மக்களையும் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கோஜு ரியூ தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 95 பேர் கலந்து கொண்டு வெற்றிபெற்றனர். அவர்கள் மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில்வே நிலையம் இன்று வந்தடைந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் மே.6 ஆம் தேதி முதல் ஜூன்.1 ஆம் தேதிகளில் 7 -18 வயதிற்குட்பட்டோருக்கான கணினித் திறன்களை கற்க கோடைக்கால பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் குழந்தைகள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். பயிற்சிகள் அரை நாள் நடத்தப்படும் என இன்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் மூலம் ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோவையை சேர்ந்த சுதாகர் என்பவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். மனைவி, இரு குழந்தைகள் கோவை சிங்காநல்லூரில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சுதாகரின் மனைவி நேற்று அப்பகுதியில் உள்ள பிரபல கேஎஃப்சி உணவகத்தில் 4 சிக்கன் வகைகளை ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்த போது ஸ்டீல் கம்பி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர்கண்காட்சி வருகின்ற மே 10ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. ஊட்டி மலர்கள் காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என இன்று (மே.03) போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.
தேசிய விடுமுறை நாளான மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது கோவையில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 78 உணவு நிறுவனங்கள் உள்பட 162 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மே.03) தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது
Sorry, no posts matched your criteria.