Coimbatore

News May 5, 2024

விளம்பர பலகைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்

image

கோவை மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று உத்தரவிட்டார். இந்நிலையில் கோவையில், 14 இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, 23 விளம்பர பலகைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர்.

News May 5, 2024

188 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை

image

கோவை மாவட்டத்தில் இன்று 13 நீட் தேர்வு மையங்களில், நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 7128 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று நடைபெற்ற தேர்வில் 6,932 மாணவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர். 188 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை நீட் தேர்வில் விண்ணப்பித்து விட்டு ஏன் தேர்வு எழுத வில்லை என தேர்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News May 5, 2024

6 வயது சிறுமி அசத்தல் 

image

கோவை, வடவள்ளி இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ் குமார், கீதா தம்பதியின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ(6). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுமி ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணினியில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்து வந்துள்ளார். ஆர்வத்தை கண்ட பெற்றோர் கொடுத்த பயிற்சியில் 50 தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

News May 5, 2024

28ம் தேதி வரை மழை நீடிக்கும்

image

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மழை வாய்ப்புள்ளதால் கத்திரி வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காதுஎன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் சத்யமூர்த்தி இன்று தெரிவித்தார்.

News May 5, 2024

சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், சமூக வலைதளங்களில் அவர்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News May 5, 2024

சவுக்கு சங்கருக்கு வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்று அவரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவை ஜே.எம்.1 வது நீதிமன்றத்தில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News May 5, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – கணக்கெடுப்பு துவக்கம்

image

கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பிதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு தொடங்கியது.

News May 4, 2024

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை கல்லூரி இணையத்தளத்தில் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் இன்று கூறியுள்ளது.

News May 4, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

மாநகரில் தண்ணீர் தட்டுபாடு, ஆணையரிடம் மனு

image

கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, நீக்கி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகர ஆணையரிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!