India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து விடை பெற ஒவ்வொரு நிறுவனங்களிலும், மாதந்தோறும் நடைபெறும், பெண்கள் குறித்த புகார்களின் அறிக்கையை மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை அசோக்நகர் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2022 ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.22,999 செலுத்தி ஏசி பெற்றார். வாங்கிய சில நாட்களிலேயே ஏசி பழுதானது. ஏசியை அந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி விட்டு பணம் கேட்டு கொடுக்க மறுக்கவே நுகர்வோர் கோர்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் ஏசிக்கான பணம் ரூ.22,999, மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்89.16% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள்84.19 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.58 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் கோவை மாவட்டம் 20 ஆவது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிக்கானி பள்ளி அருகே, காந்திபுரம் 49வது வார்டு பொன்னேரி நகர், கிழக்கு மண்டலம் 44வது வார்டு லட்சுமி மில், மசக்காளிபாளையம், சின்னசாமி லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 24 மணி நேர குடிநீர் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 94.01 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.46 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.50 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்களை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கா் கோவை சிறையில் தாக்கப்பட்டதாகவும் , அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாய் கோவை கோர்ட்டில் விண்ணப்பம் அளித்தார். இதனை பரிசீலித்த நீதிபதி சவுக்கு சங்கரை வேறு சிலைக்கு மாற்ற பரிசீலிக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
உலக செவிலியர்கள் தினம் மே மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக “நமது செவிலியர்கள் – நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற கருப்பொருளை முன்னிறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியர் (மே.9) இன்று ஆய்வு செய்தார். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறை (Strong Room) மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா உடன் இருந்தார்.
கோவை, பொள்ளாச்சியில் இரண்டு வாரங்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு படிப்பை படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.