India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் நேற்று அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. தங்கம் விலை உயர்வாக இருந்தாலும் தங்க நகைகளை இந்த சுப நாளில் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்க நகைகளை வாங்க மிகுந்த ஆர்வத்தை இந்த ஆண்டும் காட்டியுள்ளனர். நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகி உள்ளதாக இன்று தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை “லோக்மான்ய திலக் டெர்மினஸ்” ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக, டெல்லி வரை புறப்படும் ரயில் இன்று காலை 8.50 மணிக்கு, புறப்பட வேண்டிய ரயில், சில நிர்வாக காரணங்களால், மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. 3 மணி நேரம் பயணிகள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
பெண் போலீஸாரை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு விசாரணையை வரும் மே.14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று (மே.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் ஓய்வு கால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள், நோய் தடுப்பு பராமரிப்பு இல்லங்கள், நல்வாழ்வு பராமரிப்பு இல்லங்கள், இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் – 2007 ன் கீழ் மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கோவையில் கடந்த ஜன.01ஆம் தேதி முதல் இன்று வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 95.58 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்காடு அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 137 மாணவர்களில் 136 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 99.3% தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இதில், 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்த நிவேதினி என்ற மாணவி மில் தொழிலாளியின் மகள் எனத் தெரிகிறது. இதே பள்ளியில் மாணவிகள் ஆஷிகா 485, ஜான்சிராணி 482 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அட்சய திருதியை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவையில் ஒப்பணக்கார வீதி உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் நகைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் சிறப்பு சலுகைகள் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.
Sorry, no posts matched your criteria.