India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் சுற்றி உள்ள பகுதியில் உள்ள மக்கள் இந்த அஞ்சலகத்தின் மூலமாக சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், அஞ்சலக காப்பீடு என இப்பகுதி மக்கள் இந்த அஞ்சலகத்தின் மூலமாக பயன்பெற்று வந்தன. இந்நிலையில், திங்கட்கிழமை காலை அஞ்சலகத்திற்கு பணம் செலுத்த வந்த மக்கள் அஞ்சலகம் மூடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பல்லடத்தை சேர்ந்த 3 மாத குழந்தை மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. பல கிசிச்சைகள் அளிக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டது. சோதனையில் குழந்தைக்கு ‘காவசாகி ‘ எனப்படும் அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு லட்சம் மதிப்புள்ள ‘இம்யூனோ குளோபுலின் ‘ எனப்படும் மருந்து செலுத்தப்பட்ட பின் குழந்தை குணமடைந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூா் ஆகிய மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரள மாநில எல்லையில் கோவை மாவட்டம் அமைந்துள்ளதால் இங்கு சுகாதாரத் துறையினா் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனா். குறிப்பாக கோவை – கேரளம் எல்லையோர கிராமங்களில் அதிகாரிகள் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சின்னையன்(82) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என கட்சி நிர்வாகிகள், கட்சி பிரதிநிதிகள் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிணத்துகிடவில் மணிமாறன், சதாம் உசேன் உள்ளிட்ட இருவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த மாரிச்செல்வம், பாதாளம் உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன் கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் கலெக்டர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்
கோவை ஆர் எஸ் புரம் ,டி.பி ரோட்டில் உள்ள ட்ரின்ட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில் இலவச முழு கண் பரிசோதனை முகாம் இன்று (12/05/24) தொடங்குகிறது. இந்த முகாம் தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மருத்துவர் ஆலோசனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, உளர் கண் பரிசோதனை ,விழித்திரை, கார்னியா உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பெற்று 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் வைப்பு நிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்(அ)மகளிர் ஊர் நல அலுவலர்களை நேரில் சென்று முதிர்வு தொகை பெறுவதற்காக, வைப்பு நிதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு முகாம் நாளை (13ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.