Coimbatore

News May 31, 2024

ரூ.22 லட்சம் மோசடி – பெண் உட்பட மூவர் கைது

image

கருமத்தம்பட்டி பெயிண்ட் கடை உரிமையாளர் நாகராஜிடம் கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ, கணவர் கிருஷ்ணகுமார், மாமா பெருமாள்சாமி உள்ளிட்டோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.6 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லை. இப்புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் மூவரை பிடித்து விசாரித்ததில் மொத்தம் 10 பேரிடம் ரூ.22.55 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதனையடுத்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.

News May 30, 2024

3 பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம்

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வரும் 7ஆம் தேதி முதல் இணையதள வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது என இன்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

News May 30, 2024

மறைந்த பத்திரிகையாளருக்கு அஞ்சலி

image

கோவையில் தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பத்திரிக்கையாளர்கள், அஞ்சலி செலுத்தினர்.

News May 30, 2024

கோவை மழைப்பொழிவு விவரம்!

image

கோயம்புத்தூரில் நேற்று (மே.29) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வால்பாறை PTO, UPASI தேயிலை அறிவியல் துறை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சின்கோனா, சோலையார், வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சின்னக்கல்லார் பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 30, 2024

கோவையில் இருந்து நேரடியாக வெளிநாடுகள் செல்லலாம்

image

கோவை விமான துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 2ஆம் தேதி முதல் கோவையில் இருந்து டில்லி மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள 5 நகரங்களான நியூ ஆர், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ கனடாவில் உள்ள வான்குவார் செல்ல முடியும் என்றனர்.

News May 30, 2024

மாநில கிரிக்கெட் போட்டி – கால் இறுதிக்கு கோவை தகுதி

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. பின்னர், இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய கோவை அணி, இரண்டாம் நாள் முடிவில் 153 ரன்கள் சேர்த்தது. நதீர் (46), நவின் (52), பவன்ஸ்ரீ (49) சிறப்பாக விளையாடினர். போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கோவை அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

News May 30, 2024

ஈசா யோகா மையம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

image

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

News May 30, 2024

சிறு தானியங்களை ஊக்குவிக்க மானியம்

image

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்துக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்களை அதிகம் உற்பத்தி செய்வது, இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, கோவை மாவட்டத்தில் மானியங்கள் வழங்கப்படுவதாக இன்று வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி கூறினார்.

News May 30, 2024

கோவையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

image

கோவைக்கு தொண்டாமுத்துார், ஆலாந்துறை, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து, காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோடைமழை துவங்கி இருப்பதால், விவசாயிகள் இப்போதுதான் சின்ன வெங்காயம் விதைப்பை துவங்கி உள்ளனர். அதனால் பட்டறையில் சேமித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் விலை அதிகரித்துள்ளதாக இன்று கூறினர்.

News May 30, 2024

கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

image

தென்கிழக்கு அரபிக் கடலில் மேல் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இன்றிலிருந்து (மே.30) தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள கோயம்புத்தூரிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!