India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் குடும்பம், பண பரிமாற்றம், இடப்பிரச்சனைகள் குறித்த 72 மனுக்கள் மீது மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்று மனுக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதோடு 59 மனுக்களுக்கு சுமூக தீர்வும், 13 மனுக்கள் மீது மேல்விசாரணை நடத்தவும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அலுவர்கள் மூலம் மாநகராட்சி அணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார். கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா மற்றும் அவரது கணவன் ஆனந்தகுமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்து நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் குளம், குட்டைகளில் 83 இடங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 26ஆம் தேதி வரை வந்த விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். மேலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தாலுகா அளவில் அனுமதி கொடுப்பதற்கான அரசாணை வந்திருக்கிறது. அதற்கான மொபைல் செயலி உருவாக்கும் பணி நடந்து வருகிறது என கோவை கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல பெண்களிடம் சிறு, சிறு பணிகளை வழங்கி அவர்களுக்கு பண ஆசையை வரவழைத்து கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளது GMR GROUP என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயலி மூலம் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கோவையில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி வரும் 10 ஆம் தேதி காலை டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூா் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 17வது கோயம்புத்தூர் விழா தேதி அறிவிப்பு, இலச்சினை வெளியீடு ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றன. இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விழாவுக்கான போஸ்டர், இலச்சினையை வெளியிட்டனர். இந்த விழா நவ.23 முதல் டிச.1 வரை நடைபெறும் என அறிவித்தனர்.
தமிழக அரசின் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சமூகநல அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்கள், சுய விவரத்துடன் ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கலெக்டர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மேயரான கல்பனா மற்றும் அவரது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் திமுக தலைமைக்கு சென்றதாகவும், இதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மேயர் பதவிக்கு கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை ஆகோயோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை ஜிஎஸ்டி, மத்திய வரிகள் ஆணையரகத்தில் GST தின விழா நேற்று(ஜூலை 1) நடைபெற்றது. விழாவுக்கு மத்திய வரிகள் ஆணையா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 2017-ல் GST அமல்படுத்தப்பட்டபோது கோவை ஆணையரகத்தில் 26,744 பேர் மட்டும் வரி செலுத்துபவா்களாக இருந்தனா். ஆனால் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 81,552 ஆக உயா்ந்துள்ளது. இது 204% அதிகரிப்பாகும் என்றார்.
கோவை கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் சிஎம்எஸ் கோப்பைக்கான 29ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாணவர் பிரிவில் 29 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 23 அணிகள் என 50க்கும் மேற்பட்ட அணிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டியிட்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.