India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத்தில் நேற்று(ஜூலை 24) பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், அப்போது கோவையில் ‘ROAD SHOW’ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், ரஷ்யாவில் இருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இவரிடம் உக்கடம் அருள் நகரை சேர்ந்த ஜூனைத் என்பவர் ஸ்நாப் சாட் மூலமாக பெண் குரலில் பேசி வந்துள்ளார். சிறுமியும் பேசுவது பெண் என நினைத்து பேசி வந்துள்ளார். பேசுவது ஆண் என தெரியவே பேசுவதை நிறுத்திவிட்டார். தொடர்ந்து மாணவியிடம் ஜுனைத் காதலிக்க வற்புறுத்தியுள்ளார். புகாரின் பேரில் ஜூனைத் நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைப்பது வழக்கம். இந்த நிலையில், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று(ஜூலை 24) அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாநகர ஆணையர் இன்று கூறியதாவது. கோவையில் ஏதாவது தீவிரவாத அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை எதிர் கொள்ளும் விதமாக இன்று கோவை, பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள டைடல் பார்க் வளாகத்தில் தீவிரவாத எதிர்ப்பு ஒத்திகை நடைபெற்றது. மேற்கூறிய ஒத்திகை நிகழ்விற்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்கியதற்கு நன்றி எனவும் இச்சம்பவத்தின் நிகழ்வு குறித்து ஏதும் தவறான வதந்திகளை பரப்பக் கூடாது என்றார்.
கோவை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் இன்று கூறியதாவது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 1017 பள்ளிகளில் பயிலும் 66,164 மாணவ, மாணவியர்கள் காலை சிற்றூண்டி வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், கோவை, மயிலாடுதுறை, தர்மபுரி மாவட்டங்கள் அடங்கிய மண்டல போட்டி, 16 வயதுக்குட்பட்டோருக்கு இன்று தொடங்கியது. சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய சேலம் அணி, 50ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தன. அடுத்து ஆடிய கோவை அணி 41.1 ஓவரில், 8 விக்கெட்களை இழந்து, 156ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோவை மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் இன்று வரை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 166 நபர்களை கைது செய்து, 148 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், 18 நபர்களை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3902 கிலோ 38 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழக தொழில்துறையினரை மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு, அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. ம.பி மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தலைமையிலான குழுவினர் கோவையில் முகாமிட்டு, தொழில்துறையினரை இன்று சந்தித்தனர். இந்நிலையில் நாளை, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கோவையில் உள்ள அனைத்து தொழில்துறையினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
தமிழக தொழில்துறையினரை மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு, அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. ம.பி மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தலைமையிலான குழுவினர் கோவையில் முகாமிட்டு, தொழில்துறையினரை இன்று சந்தித்தனர். நாளை, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் அனைத்து தொழில்துறையினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து காதலிப்பதாக கூறி ஏமாற்றி 20 மாணவிகளிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, எத்தனை முறை காவல்துறை சொன்னாலும், திரைப்படங்களில் சொன்னாலும், செய்தித்தாளில் செய்தி வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.