India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤விரைவில் பன்றிகளை சுட அரசாணை – மாவட்ட வன அலுவலர்.
➤Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை- கோவை காவல் ஆணையர்
➤கோவை டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
➤ஆழியாறில் திடீர் சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு
➤ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் மனுக்கள் மீது மறு விசாரணை இன்று நடைபெற்றது. இன்று ஒரே நாளில் 86 மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் வழக்கம் போல அன்றாட பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது இன்று மதியம் மலை பாம்பு ஒன்று அங்குள்ள புதருக்குள் தென்பட்டுள்ளது. இது குறித்து வேலுசாமி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது, கேரளமாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கொல்கத்தா ஷாலிமார் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து 23.08.2024 முதல் 13.09.2024 வரை வெள்ளிக்கிழமை மாலையில் இந்த ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயிலானது கொல்லம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், வழியாக செல்லும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷன்களில், டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நடைமுறை உள்ளது. இதைத் தவிர்க்க கோவை, போத்தனூர், திருப்பூர் உட்பட 78 ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயணிகள் இனி ஜி-பே, போன்-பே, பே-டிம் செயலிகளை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கலாம்.
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல்தொடா்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் 57வது பதிப்பு மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் அரங்கில் நேற்று நடைபெற்றது.
‘தமிழ்நாடு தி குளோபல் ஸ்கில் கேபிட்டல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது, தமிழா்கள் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனா் என்றார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் தொடர்ந்து காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 71 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் மொத்த நீர்க்கொள்ளளவான 17.820 டிஎம்சியில் 17.589 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. பரம்பிக்குளம் அணை நிரம்பி நீர் ததும்பும் நிலையில் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக இருந்தால், பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக உபரிநீரை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல்துறையின் மூலம் ட்ரோன் ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 60 உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு Digital Sky வலைதளத்தில் முறைப்படி பதிவுசெய்து அனுமதி பெற அறிவுறுத்தப்படுகிறது. Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
தமிழக வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோவை வனக்கல்லூரி வளாகத்தில் இன்று மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பன்றிகளை சுடுவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றார்.
Sorry, no posts matched your criteria.