India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் ரஞ்சித் நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் பிரஸ் மீட்டில் கூறியதாவது, தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. நான் இந்த படத்தில், நாடக காதல் பற்றியும் சொல்லி இருக்கிறேன். நல்ல காதல் பற்றியும் சொல்லி இருக்கிறேன். சமூக வலைதளங்களில் என்னை பற்றி, தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர். என் மேல் தவறான விமர்சனம் வைக்கப்படுகிறது என்றார்.
தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக எர்ணாகுளம் – பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளத்தில் இருந்து 16.08.2024 முதல் 06.09.2024 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் திங்கட்கிழமைகளில் காலை 3.30 மணிக்கு பாட்னாவை சென்றடையும் என்றனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு சிறந்த ஆட்சியருக்கான விருது வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது அவருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கி அரசின் திட்டங்களைப் பெற உதவியதற்காக வழங்கப்படுகிறது. கோவை கலெக்டருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று கூறுகையில், அடுத்த இரு வாரங்களுக்கு சென்னை, கொங்கு மண்டலத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகள், வட தமிழ்நாடு மற்றும் டெல்டா பகுதிகளில் தினமும் மிதமானது முதல் கனமான இடியுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பாலக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை மாநகரில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இன்று (ஆக.10ம்) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், 11, 12, 13ம் தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆக.14ம் தேதி இடியுடன் கூடிய மித மழைக்கும், 15, 16 தேதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. வெப்ப நிலையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 332 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.
கோவை தனியார் கல்லூரியில் தமிழக ஆளுநர் ரவி, இன்று பங்கேற்கும் விழாவில் கருப்புச் சட்டை அணிந்ததற்காக மாணவர்களுக்கு அனுமதி மறுத்ததற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கருப்பு உடையை கண்டு ஆளுநர் ரவி, அஞ்சுவது ஏன்?. இது மாணவர்களுக்கான நிகழ்ச்சியா? உடைக்கான நிகழ்ச்சியா எனவும் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் ‘Building Bharat – Journey towards 2024’ என்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், கிராமப்புற (ம) பின் தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்தார்.
சிங்கப்பூர் – கோவை விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது, அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் கண்காணித்த போது இரு பயணிகளை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, 100 கிராம் எடை கொண்ட ஆறு தங்க கட்டிகள், ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இதை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை இன்று முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்எல்ஏ-வுமான எஸ்பி வேலுமணி இன்று காரில் பயணித்தபடி பார்வையிட்டார். அதிமுக தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டூவீலர்களிலும், கார்களிலும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், பேசிய வேலுமணி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே திமுக திறந்து வைக்கிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.