India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சிறந்த பேரூராட்சிக்கான விருது, கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு செய்யப்பட்டது. அதே போல், சிறந்த பேரூராட்சியாக சூலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி விஜயா இன்று கூறியதாவது..
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து உடனடி தீர்வு கானும் வகையில் வரும் 14.09.2024 அன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவு பெறாமல் உள்ள வழக்குகளை இங்கு முறையிட்டு தீர்வு கானலாம் என்று தெரிவி்த்துள்ளார்.
78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புரானி காலனியில் மஸ்ஜித் உல் குத்பி புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி,
அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
கோவை வஉசி மைதானத்தில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 83 பேருக்கு, அரசு அலுவலர்கள் 140 பேருக்கு மொழி போராட்ட தியாகிகள் என பலருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மதுரையில் இருந்து வரும் ஆக.18ஆம் தேதி இரவு புறப்படும் மதுரை – முஷாபா்பூா் ஒருவழி சிறப்பு ரயில் ஆக.21ஆம் தேதியன்று முஷாபா்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, கோவை, பெரம்பூர், கூடூர், நெல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருது, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் சிறந்த மாநகராட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு செய்யப்பட்டது. இன்று சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் இவ்விருதை வழங்கினார். கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தேசிய கொடியேற்றி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறாா். தியாகிகளை கெளரவிப்பதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா். இதனையொட்டி மாநகரில் 1700, புறநகரில் 800 என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் விடுமுறையை ஒட்டி மக்களில் பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கிளை சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 55 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வரும் ஆக.18ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று கூறியதாவது.
தேசியக்கொடி பேரணி நடத்துவதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் காவல்துறை எதற்கு? தேசியக்கொடி பேரணி நடத்தினாலே சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மோசமாக இருக்கிறதா? காவல்துறை செயலிழந்து விட்டதா? என அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கோவை, மருதமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகரை கண்ட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் திருக்கோவில் நடைபெற்ற சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையிலும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.