India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் நாளை பவானி ஆற்றில் கரைக்கப்படுவதால் மேட்டுப்பாளையம் போலீசார் போக்குவரத்து மாற்றத்தினை அறிவித்துள்ளனர். கோவையில் இருந்து வரும் வாகனங்கள் குட்டையூர் அரசு கல்லூரி வழியாக அன்னூர் சாலை சென்று பின் ஊட்டி செல்லலாம். ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, சிறுமுகை நால் ரோடு சென்று அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது, கோவையில் நாளை (செப்-9) மதியம் 3மணியளவில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அனைவருக்கும் கடனுதவிகளை வழங்க உள்ளார் என்று தெரிவித்தார்.
வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கோவை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும். தொழிலாளர்களிடமும் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்காக 450-க்கும் மேற்பட்ட தொழில்கள் வகைப்படுத்தப்பட்டு உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியை விடுபடாமல் வசூலிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் புதிய செயலியை உருவாக்கி பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவையில் வாட்ஸ்அப் குழு மூலம் 117 ஏஜென்ட்களை இணைத்து, இந்தியா முழுவதும் வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 நபர்களை, கோவை தனிப்படை போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடம் இருந்து சிம் கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகம் பறிமுதல் செய்யபட்டு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் காயத்திரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் “கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. தொழிலாளர் நலச்சட்டங்களை மீறிய கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 244 நிறுவனங்கள் என மொத்தம் 281 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தொழிலாளர் துறை சார்பில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் 4 பேரை, அபாயகரமான பணியில் அமர்த்திய 3 நிறுவனங்களுக்கு, விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுபாளையம் பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நாளை மறுதினம் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. ஐஜி செந்தில் குமார், டிஐஜி சரவணன் சுந்தர் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டருடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில் தீபாவளி அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு உரிமத்தை அரசு உத்தரவுப்படி நடப்பு ஆண்டு முதல் ஒற்றைசாளர முறையில் பெற்றிட வேண்டும். இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செப்.7 முதல் அக்.10 வரை இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை சரக போலீஸ் டிஐஜி சரவணசுந்தர் நேற்று கூறுகையில், குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போலீசார் ரோந்து செல்லும்போது மர்ம ஆசாமிகள் ஆயுதங்கள், கற்களை தூக்கி வீசும் சம்பவம் நடந்துவருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து செல்லும்போது துப்பாக்கி எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.