India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤கோவையில் வரும் 24ஆம் தேதி கிராமங்களில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெறவுள்ளது. ➤சூலூரில் பிரபு என்ற வாலிபர் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ➤தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ➤கோவை, பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியில் குட்டிகளுடன் உலா வரும் யானைகள்.
திமுக எம்.பி தயாநிதி மாறன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராகும் ஆசையில் 3 மாதங்கள் தமிழகத்தில் டேரா போட்டவர் தான் நிர்மலா சீதாராமன். அடிமைகளின் ஆட்சியை வீழ்த்தலாம் என்று நினைத்தனர். அப்போது அவர், இந்தாண்டு நீட் இருக்காது. அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறினார்.
சூலூர் அருகே கிளினிக்கில் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திக் கொண்ட வாலிபர் உயிரிழந்தார். செஞ்சேரிமலையில் உள்ள கிளினிக்கில் பிரபு (22) என்ற வாலிபர் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமுகை வச்சினம் பாளையம் ஜவகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் வந்துள்ளது. அதன் பெயரில் அங்கு சென்ற எஸ்ஐக்கள் ரவிச்சந்திரன், ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 840 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனைப் பதுக்கி வைத்திருந்த ஷபிக் அகமது புகாரி என்பவரை தேடி வருகின்றனர்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது..
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள், முதியவர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அதிக படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வரும் 24ம் தேதி, பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் மகளீர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் -கோவை ரயிலில் கடந்த 6 மாதங்களாக ஒரு நபர் பின்தொடர்ந்து வருவதாக கல்லூரி மாணவி ரயில்வே போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அப்துல் ரசாக் வழக்கறிஞர் என்பதும், ரயிலில் இதுபோன்று பெண்களை விதவிதமாக புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.
கோவை கண்ணப்ப நகர் பகுதியில் 5வதாக திறக்கபட உள்ள டாஸ்மாக்கடையை திறக்க கூடாது கன்று மதிமுக ஒட்டுநர் தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக் கொண்டு உண்ணாவிரதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதிமுக ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து விசாரணைக்காக இன்று காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 22.09.20ல் கிருத்திகை மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் வருவதையொட்டி மேற்படி நாளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலை படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் செல்லாலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத்தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கலாம் என்று கோவை ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த சக்தி பாண்டி கடந்தாண்டு கோவையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகையை சேர்ந்த ஆல்வின் கைது செய்யப்பட்டார். பின், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோவை கொடிசியாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
Sorry, no posts matched your criteria.