India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் கலப்படமற்ற மற்றும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், பரவலாக பருவமழை பெய்துள்ள இச்சூழலில் பயிர் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது எனவே, கூடுதல் விலைக்கு உர விற்பனை யாளர்கள் எவரும் உரங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி கடும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று கோவை வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து நேர்காணலில் கலந்து கொள்ள வரும் நபர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு (18.10.2024) அன்று திட்டமிட்ட (ஒப்பந்த அடிப்படையில்) நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியாளர்கள் (நிலையச்செவிலியர்) காலிப்பணியிடத்திற்கான நேர்க்காணல் (11.11.2024) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் காளி கோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு புகார் மனு அளிக்க இன்று வந்திருந்தனர். அப்போது வாரிசுதாரரான ஒரு பெண் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில், பீளமேடு- 22.70, வேளாண் பல்கலை-68.60, பெரியநாயக்கன் பாளையம் -34.60, பில்லுார் அணை-12, அன்னுார் – 10.20, கோவை தெற்கு – 19, சூலுார் – 22.20, வாரப்பட்டி -64, தொண்டமுத்துார் – 11, மதுக்கரை – 12, போத்தனுார்-14,80. கிணத்துக்கடவு – 14, சின்கோனா-14, சின்னக்கல்லார் – 47, வால்பாறை – 23, சோலையாறு 13 மி.மீ மழை பதிவானது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 23-ந்தேதி காலை 10 மணிக்கு பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு எம்.சி.வேலுசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை பதிவு செய்ய, திருத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா கேட்டுக் கொண்டுள்ளார்
கடந்த சில தினங்களாக கோவை மாநகரில் ஹோட்டல்கள் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன போலீசாரின் விசாரணையில் அவை வதந்தி என தெரியவந்துள்ளது இது குறித்து பேசிய சிட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பள்ளி, கல்லுாரி, நிறுவனங்கள் இது போன்ற இ – மெயில் வந்தால் அச்சம், பதற்றம் அடைய வேண்டாம். வெடிகுண்டை கண்டுபிடித்து அதை செயலிழக்க வைக்கும் அளவிற்கு கோவை மாநகர போலீசில் உபகரணங்கள் உள்ளன என்றார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையின் போது ரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கும் போது அப்பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது குளிப்பது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரசு ஊழியர்கள் அரசியல் கட்சியினர் யாரேனும் பட்டாசு கடைகளில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பணம்/பரிசு பொருட்கள் ஏதேனும் பெற முயற்சித்தால் தகுந்த ஆதாரத்துடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை 81900-00100 எண்ணுக்கு whats app மூலம் தகவல் கொடுக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றனர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையால், சென்ட்ரலில இருந்து இன்று இரவு 9.05 க்கு புறப்படவிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671) ஆவடியில் இருந்து இரவு 9:30 க்கு புறப்படும். அதுபோல் சென்னை பாலக்காடு ரயில் (22651) ஆவடியில் இருந்து இரவு 10:15க்கு புறப்படும். சேரன் எக்ஸ்பிரஸ் (12673), ஆவடியில் இருந்து இரவு 11:00 மணிக்குப் புதுப்படும் என அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.