India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை அருகேயுள்ள க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடியாக இங்கு சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவையில் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் தீபாவளியையொட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
கோவை மாநகராட்சி முழுவதும் தற்பொழுது உயர்த்தியுள்ள ஆறு சதவீத சொத்துவரி உயர்வை உடனடியாக முழுவதும் ரத்து செய்ய வேண்டும் அதோடு வரி கட்டாதவர்களுக்கு ஒரு சதவீத அபராத வரியையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக மாமன்ற குழு தலைவரும் 26வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சித்ரா வெள்ளியங்கிரி, கோரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து சேவையானது 28ஆம் தேதி முதல் 31ம் தேதி அதிகாலை வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் 28ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை. மேலும் கோவை மண்டலத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காந்திபுரம் நகர பேருந்து நிலையம் நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நாட்களாக மிகவும் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஆரஞ்சு அலட் விடப்பட்ட சூழ்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 9 சென்டி மீட்டர் மழை பதிவானது. அனேக பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர் .
கோவை காந்திபுரத்தில், 300 கோடி ரூபாயில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வரும், 4ம் தேதி கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், இந்நூலகத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக, செந்தில்பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்ட பின், நடத்தப்படும் முதல் அரசு விழா என்பதால், பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் Bull நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை என்பவரின் இல்லம், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் லஷ்மி டூல்ஸ் உரிமையாளர் வரதராசன் என்பவரது இல்லம் ஆகிய இல்லங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
EPFO அமைப்பு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிதி ஆப்கே நிகாட் 2.0 என்ற பெயரில் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடத்தி சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இந்த வகையில் அக்.28 அன்று பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே PF வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குறைகளை சரி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர் பகுதியான ஏர்போர்ட் பீளமேட்டில் அதிகபட்சமாக 87.60 மி.மீ மழையும், தெற்கு தாலுகா பகுதியில் 70 மி.மீ மழை, பாப்பநாயக்கன்பாளையத்தில் 58.60 மி.மீ மழையும், கோவை புறநகர் மாவட்டம் வால்பாறை 74 மி.மீ மழையும், சோலையார் பகுதியில் 72 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தை குறைந்த பட்சமாக ஆனைமலையில் 3 மி.மீ மழையும் மற்றும் சிறுவாணி அடிவாரத்தில் 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.