India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை ராமநாதபுரம் பகுதியில் முளைப்பாரி ஊர்வலத்துடன் சென்று முத்துராமலிங்க தேவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு, குழந்தைத் திருமணம் குறித்து சைல்டு ஹெல்ப் லைன் எண், 1098-க்கு உண்மையான, உறுதியான, அதிகாரப் பூர்வமான தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானத் தொகையாக 2,000 ரூபாய் கலெக்டரின் பொது நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி கோவையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கோவை வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அழகரசு கூறுகையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எங்களது குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர் என்றார்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி, நவம்பர் 1ஆம் தேதி இரு தினங்களும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தீபாவளி அன்று காலை மழை செய்யும் என்பதால் தீபாவளி கொண்டாடும் கோவை மக்கள் சற்று கலக்கத்துடன் உள்ளனர்.
தீபாவளி ஷாப்பிங் செல்பவர்கள் கடைகளின் மீது மட்டும் பார்வையை வைக்காமல் தங்களது உடைமைகள் மீதும் அவ்வப்போது பார்வையை வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி உங்களது உடைமைகளை திருடிச் செல்ல வாய்ப்புள்ளது என கோவை மாநகர போலீசார், மக்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர்களது முகநூல் பக்கத்தில் இன்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம் உள்ளிட்ட பேருந்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இந்த அட்டவணையை கவனித்து பயணத் திட்டம் மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் ஒருவருக்கான டிக்கெட் கட்டணம் ரூ.3,399 ஆக உள்ளது. ரூ.2,465 தான் வசூலிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியுள்ள நிலையில் கட்டணம் ரூ.3,399 ஆக உள்ளது. அதேபோல் ஏசி இல்லாத (Seater)பஸ்சில் சென்னை – கோவை டிக்கெட் விலை ரூ.1,720 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை மெமு 06106 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து காலை 09.35 மணிக்கு புறப்படும் மெமு ரயில் திண்டுக்கல்லுக்கு மதியம் 1:10க்கு சென்றடையும். மறு பயணத்தில் 06107 இந்த ரயில் திண்டுக்கலில் மதியம் 2:00 மணிக்கும் புறப்பட்டு மாலை 5:50 க்கும் கோவை சென்றடையும்.
கோவை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள் நலவாரியம் மூலம் சுய உதவிக்குழு பிரதிநிதிகள், கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான 1 நாள் கருத்தரங்கம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.