India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டினப்பாக்கத்தில் 13 வயது சிறுமி கடந்த 25ஆம் தேதி தனது நண்பரைச் சந்திக்க வந்தபோது பிரச்னை ஏற்பட்டதால், அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். உதவ வேண்டிய மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், சிறுமியை போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் இறக்கிவிட சென்றபோதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர்களில் முதன்மையானவரும், சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி ராஜ் பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமசாமி ரெட்டியார் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
சென்னையில் இன்று (01.02.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டை பகுதியில், கல்லூரி மாணவர் ஒருவர் போதைப் பொருள் விற்பதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நளீன் பாசித் (20), அன் ரியன் சோனிக் (19), மிக்கன் (20), அயான்கான் (24) மற்றும் மாயூர் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளிலிருந்து, 51 கிராம் கொக்கைன், 850 கிராம் கஞ்சா, மூன்று கிராம் ஓஜி கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
01.01.2025 முதல் 31.01.2025 வரை மொத்தம் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி 10, 2025 அன்று 3,60,997 பயணிகளுடன் அதிகபட்ச பயணிகள் ஓட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இப்போது CMRL வாட்ஸ்அப் டிக்கெட் அமைப்பு (+91 83000 86000) மூலம் பதிவு செய்யலாம்.
2025 ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், QR Code பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகள் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது. பல திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த டேவிட் (24), மணி, திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மூவரும் பிடிபட்டனர். கைது செய்யும்போது டேவிட், மணிகண்டன் இருவரும் தப்பி ஓடுகையில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர், விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அனைவரையும் ராமேஸ்வரத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில தினங்களாக வாட்ஸ்-அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பண இழப்பு ஏற்படுவதாக பலரும் புகார் அளித்து வருகின்றனர். இந்த புதிய வகை மோசடி குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி அழைப்பு வந்தால் உடனே முடக்குங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யுங்க
தமிழ்நாட்டில் இன்று (பிப்.1) முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது. அதன்படி, முதல் 2 கி.மீ.,க்கு ரூ.50. அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.18 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு கட்டண நிர்ணயம் செய்த பிறகு இதுவரை கட்டணம் மாற்றி அமைக்கப்படாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமே இந்த புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.