India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பிப்.20ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் ஊதிய உயர்வு தேவை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேமுதிகவின் தொழிற்சங்கமும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, முதல்வர் தலைமையில் திமுக அமைதி பேரணி நடைபெற உள்ளது. இதனால் நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகங்கள் இராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிட வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.
மெரினா கடற்கைரை நொச்சி நகரில், சட்டப்படிப்பு படித்து வரும் இளம்பெண்ணை ஆபாசமாக பேசயுள்ளார். தாக்கிய வழக்கில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஈசிஆரில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சந்தோஷ், தமிழ்குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சந்துருவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது கடத்தல், பணமோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.2) நடைபெற்றது. முதல் ஆண்டை நிறைவு செய்து 2ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பனையூரில் அக்கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றினார். தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளின் சிலைகளையும் திறந்து வைத்தார்.
காசி தமிழ்ச்சங்கம் 3ஆம் ஆண்டு விழா, வரும் பிப்.15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் மக்கள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – பனாரஸ் இடையே (06193) வரும் பிப்.13ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸில் இருந்து சென்னைக்கு (06194) பிப்.19ஆம் தேதி இயக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
கொடைக்கானல் செல்லும்போது சுங்கச்சாவடியை எளிதில் கடந்து செல்லவே காரில் திமுக கொடியை பொருத்தினோம் என ஈசிஆர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், “என் நண்பன் சந்தோஷ் கூறியதால்தான் அந்த பெண்களின் காரைத் துரத்தி சென்றோம். பின், தவறான காரை துரத்திவிட்டோம் என உணர்ந்து மன்னிப்பு கேட்டோம். சம்பவத்தின்போது நாங்கள் யாரும் மதுபோதையில் இல்லை” என்றார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் பிப்.7ஆம் தேதி காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. வரும் பிப்.12ஆம் தேதி 25ஆவது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு, முக்கிய ஆலோசனைகள், கட்சியின் வளர்ச்சி குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வளசரவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், போதையினால் கைகளை இழந்து தவித்து வருவதாகவும், மனைவி 2 குழந்தைகள் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தாயின் பராமரிப்பில் இருக்கும் அவர், தனது 2 நண்பர்கள் போதை பழக்கம் காரணமாக இறந்துவிட்டதாகவும், மற்ற சிலர் திருமணம் முடிந்து வேறொரு பகுதியில் வசித்து வருவதாவும் கூறினார். மேலும், யாரும் போதை பழகத்திற்கு அடிமையாக வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்.1) கட்சியின் தலைவர் விஜய்யை, ஜப்பான் ரசிகைகள் சிலர் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ரசிகர்கள், தாங்கள் வைத்திருந்த போன், கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் என்ற அனைத்திலும் விஜய்யின் போட்டோவை வைத்திருந்ததை காட்டி விஜய்யை நெகிழ வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.